என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா
X
நாய்க்குட்டி படம்
Byமாலை மலர்29 April 2016 4:24 PM GMT (Updated: 29 April 2016 4:24 PM GMT)
வெற்றிவேல் 567 மெகா பிக்சர்ஸ் பட நிறுவனம் சார்பாக தயாரிக்கும் படம் ‘நாய்க்குட்டி படம்’. இதில் டோனி என்ற ஆண் நாய்க்குட்டி, ஜீனோ என்ற பெண் நாய்க்குட்டி நாயகன்-நாயகியாக நடிக்கின்றன.
வெற்றிவேல் 567 மெகா பிக்சர்ஸ் பட நிறுவனம் சார்பாக தயாரிக்கும் படம் ‘நாய்க்குட்டி படம்’. இதில் டோனி என்ற ஆண் நாய்க்குட்டி, ஜீனோ என்ற பெண் நாய்க்குட்டி நாயகன்-நாயகியாக நடிக்கின்றன. காதல் ஜோடியாக நிதின் சத்யா, ஸ்ருதி ராமகிருஷ்ணன் நடிக்கிறார்கள். இவர்களுடன் எம்.எஸ்.பாஸ்கர், டெல்லிகணேஷ், மகாநதிசங்கர், பொன்னம்பலம், வாசுவிக்ரம், வையாபுரி, ஜெயமணி, போண்டாமணி, கிங்காங், சிசர் மனோகர், அழகு, வாமன் மாலினி, ரவிராஜ் ஆகியோர் நடிக்கிறார்கள்.
ஒளிப்பதிவு-ஆனந்த், இசை-ஜெய.கே.தாஸ், நடனம்-ஷெரீப், ஸ்டண்ட்- நாக் அவுட் நந்தா, எடிட்டிங்-மாரீஸ் ஜி.வெங்கடேஷ்.
கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்-ரங்கா இவர் இயக்குனர்கள் எஸ்.டி. ரமேஷ் செல்வன், சித்திரை செல்வன், எல்.ஜி.ரவிசந்தர் ஆகியோரிடம் உதவியாளராக பணியாற்றியவர்.
தயாரிப்பு-ஏ.வெற்றிவேல் இவர் 100-க்கும் மேற்பட்ட படங்களை வினியோகம் செய்தவர். தியேட்டர்களையும் நடத்துபவர்.
படம் பற்றி இயக்குனர் ரங்கா கூறும்போது....
“மக்கள் ஒரே மாதிரியான கதையை விரும்புவதில்லை. ஏதாவது புதிதாக எதிர் பார்க்கிறார்கள். அதற்காக யோசித்தது தான் இந்தக்கதை. நிதின் சத்யா வளர்க்கும் நாய் டோனி. ஸ்ருதி ராமகிருஷ்ணன் வளர்க்கும் நாய் ஜீனோ. இந்த நாய் குட்டிகளில் திடீரென்று டோனி காணாமல் போய்விடுகிறது. அந்த நாயை தேடி நிதின் சத்யா ஒரு பக்கம் அலைகிறார். இன்னொரு பக்கம் நான்கு திருடர்கள், அத்துடன் அரசியல் வாதிகள் இருவர். இப்படி ஆளாளுக்கு அந்த நாயை ஏன் தேடுகிறார்கள்? என்பது திரைக்கதை சுவாரஸ்யம். முதல் சீன் முதல் கடைசி சீன் வரை நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாக்கியுள்ளோம்” என்றார்.
ஒளிப்பதிவு-ஆனந்த், இசை-ஜெய.கே.தாஸ், நடனம்-ஷெரீப், ஸ்டண்ட்- நாக் அவுட் நந்தா, எடிட்டிங்-மாரீஸ் ஜி.வெங்கடேஷ்.
கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்-ரங்கா இவர் இயக்குனர்கள் எஸ்.டி. ரமேஷ் செல்வன், சித்திரை செல்வன், எல்.ஜி.ரவிசந்தர் ஆகியோரிடம் உதவியாளராக பணியாற்றியவர்.
தயாரிப்பு-ஏ.வெற்றிவேல் இவர் 100-க்கும் மேற்பட்ட படங்களை வினியோகம் செய்தவர். தியேட்டர்களையும் நடத்துபவர்.
படம் பற்றி இயக்குனர் ரங்கா கூறும்போது....
“மக்கள் ஒரே மாதிரியான கதையை விரும்புவதில்லை. ஏதாவது புதிதாக எதிர் பார்க்கிறார்கள். அதற்காக யோசித்தது தான் இந்தக்கதை. நிதின் சத்யா வளர்க்கும் நாய் டோனி. ஸ்ருதி ராமகிருஷ்ணன் வளர்க்கும் நாய் ஜீனோ. இந்த நாய் குட்டிகளில் திடீரென்று டோனி காணாமல் போய்விடுகிறது. அந்த நாயை தேடி நிதின் சத்யா ஒரு பக்கம் அலைகிறார். இன்னொரு பக்கம் நான்கு திருடர்கள், அத்துடன் அரசியல் வாதிகள் இருவர். இப்படி ஆளாளுக்கு அந்த நாயை ஏன் தேடுகிறார்கள்? என்பது திரைக்கதை சுவாரஸ்யம். முதல் சீன் முதல் கடைசி சீன் வரை நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாக்கியுள்ளோம்” என்றார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X