என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா
X
வாய்ப்பு கிடைக்காததால் வருத்தத்தில் இருக்கும் முன்னணி நடிகை
Byமாலை மலர்23 Dec 2017 12:15 PM GMT (Updated: 23 Dec 2017 12:15 PM GMT)
தெலுங்கு சினிமாவில் முன்னணி நாயகியாக வலம் வரும் அந்த நாயகிக்கு பட வாய்ப்புகள் கிடைக்காததால் தவித்து வருகிறாராம்.
தெலுங்கு படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான அந்த நாயகி, தமிழில் அறிமுகமான முதல் படம் வெற்றி பெற்றாலும், அவர் அடுத்தடுத்த படங்களில் ஒப்பந்தம் செய்யப்படவில்லை. பின்னர் தெலுங்கு சினிமாவில் தலைகாட்டிய அந்த நாயகி அவ்வப்போது தமிழ் படங்களிலும் நடித்து வந்தார். அந்த படங்களும் ரசிகர்களிடையே தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.
பின்னர் தெலுங்கு சினிமாவில் கவனம் செலுத்திய அந்த நடிகை, முன்னணி நடிகர்களுடன் நடிக்க வாய்ப்பு கிடைத்ததாம். அதனை பயன்படுத்திக் கொண்ட அந்த நடிகை, அடுத்தடுத்த வெற்றிப் படங்களில் நடித்து தெலுங்கு சினிமாவில் முன்னணி நாயகியாகவும் வலம் வந்தாராம்.
இப்படி இருக்கையில் சமீபத்தில் அந்த நாயகி நடித்த சிலந்தி படம் போதிய வரவேற்பை பெறவில்லையாம். மேலும் தெலுங்கி சினிமாவில் வேறு படங்களில் ஒப்பந்தமாகாத அந்த நடிகை படமின்றி தவித்து வருகிறாராம். இந்த நிலையில் தான் அவரது நடிப்பில் தமிழில் வெளியான போலீஸ் படம் நல்ல வரவேற்பை பெற்றதாம். இதை பயன்படுத்தி தமிழ் சினிமாவில் காலூன்ற நினைத்த அந்த நாயகிக்கு தமிழிலும் வாய்ப்பு கிடைக்கவில்லை. இதனால் குழம்பிப் போயிருக்கும் அந்த நடிகை மிகுந்த வருத்தத்தில் இருக்கிறாராம்.
தமிழ், தெலுங்கு என படமின்றி தவித்து வரும் அந்த நாயகி அடுத்தது பாலிவுட் பக்கம் திரும்பப் போவதாகவும் கூறப்படுகிறது. அவர் உண்மையிலேயே பாலிவுட் தான் போகிறாரா? அல்லது தான் விட்ட இடத்தை மீண்டும் பிடிக்கப் போகிறாரா தெரியவில்லையே என்று கோலிவுட் வட்டாரத்தில் பேசிக் கொள்கிறார்களாம்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X