என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா
X
அந்த நடிகை வேண்டாம்: முன்னணி நடிகரின் திடீர் முடிவு
Byமாலை மலர்24 July 2017 1:11 PM GMT (Updated: 24 July 2017 1:11 PM GMT)
முன்னணி நடிகர் ஒருவர் நடிக்கவிருக்கும் இரண்டாவது பாகத்தில், முதல் பாகத்தில் நடித்த அந்த நடிகை வேண்டாம் என்று நடிகர் கூறியிருக்கிறாராம்.
பட்டதாரி நடிகர், ஸ்டார் நடிகரின் மகள் இயக்கத்தில் நடித்துள்ள படம் விரைவில் ரிலீசாக இருக்கிறது. இந்நிலையில் தனது ஹாலிவுட் படத்தின் படப்பிடிப்பையும் முடித்துவிட்ட அந்த நடிகர், தனது அடுத்தடுத்த படவேலைகளில் கவனம் செலுத்தவிருக்கிறார். இதுதவிர நடிகரின் கைவசம் பல படங்கள் இருந்த போதிலும், நடிகர் ரவுடியாக நடித்த படத்திற்கான அடுத்த பாகம் விரைவில் துவங்க இருக்கிறது.
அந்த படத்திற்கான அடுத்தகட்ட பணிகளில் படக்குழு தீவிரமாக ஈடுபட்டிருக்கிறது. அதன் ஒருபகுதியாக, இரண்டாவது பாகத்திலும், முதல் பாகத்தில் நடித்த அதே நடிகையுடன் படக்குழு பேச்சுவார்த்தையை நடத்தி இருக்கிறது.
தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் பிசியாக இருக்கும் அந்த நடிகை தமிழில் தற்போது முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து வருகிறார். அந்த இருபடங்களும் விரைவில் ரிலீசுக்கு காத்திருக்கின்றன.
இந்நிலையில், பட்டதாரி நடிகரின் ரவுடி படத்தில் தான் நடிக்க வேண்டும் என்றால், ரூ.2 கோடியை சம்பளமாக தரவேண்டும் என்று நடிகை கேட்டிருக்கிறாராம். நடிகையின் இந்த முடிவை இயக்குநர் நடிகரின் காதில் போட்டியிருக்கிறார். ஆனால் பட்டதாரி நடிகர், அந்த நடிகை வேண்டாம். திரைக்தையில் மாற்றத்தை கொண்டு வந்து வேறு நடிகையை ஒப்பந்தம் செய்யும்படி இயக்குநரிடம் கூறிவிட்டாராம்.
இருப்பினும், சம்பளத்தை கொஞ்சம் குறைத்து பேச தயாரிப்பாளர் தரப்பு முடிவு செய்திருப்பதாக கோலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது.
அந்த படத்திற்கான அடுத்தகட்ட பணிகளில் படக்குழு தீவிரமாக ஈடுபட்டிருக்கிறது. அதன் ஒருபகுதியாக, இரண்டாவது பாகத்திலும், முதல் பாகத்தில் நடித்த அதே நடிகையுடன் படக்குழு பேச்சுவார்த்தையை நடத்தி இருக்கிறது.
தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் பிசியாக இருக்கும் அந்த நடிகை தமிழில் தற்போது முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து வருகிறார். அந்த இருபடங்களும் விரைவில் ரிலீசுக்கு காத்திருக்கின்றன.
இந்நிலையில், பட்டதாரி நடிகரின் ரவுடி படத்தில் தான் நடிக்க வேண்டும் என்றால், ரூ.2 கோடியை சம்பளமாக தரவேண்டும் என்று நடிகை கேட்டிருக்கிறாராம். நடிகையின் இந்த முடிவை இயக்குநர் நடிகரின் காதில் போட்டியிருக்கிறார். ஆனால் பட்டதாரி நடிகர், அந்த நடிகை வேண்டாம். திரைக்தையில் மாற்றத்தை கொண்டு வந்து வேறு நடிகையை ஒப்பந்தம் செய்யும்படி இயக்குநரிடம் கூறிவிட்டாராம்.
இருப்பினும், சம்பளத்தை கொஞ்சம் குறைத்து பேச தயாரிப்பாளர் தரப்பு முடிவு செய்திருப்பதாக கோலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X