என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா
X
குடும்பத்துக்காக பெரிய நடிகரின் படத்தில் நடிக்க மறுத்த நடிகை!
Byமாலை மலர்21 Feb 2017 6:07 AM GMT (Updated: 21 Feb 2017 6:07 AM GMT)
தன்னுடைய குடும்பத்துக்காக பெரிய நடிகரின் படங்களில் நடிக்க ஒரு நடிகை மறுத்துள்ளார். அது யார்? என்பதை கீழே விரிவாக பார்ப்போம்.
காட்டுக்கே ராஜாவான நடிகர், சில்லென்று காதலித்த நடிகையை திருமணம் செய்துகொண்ட பிறகு நடிகையை சினிமாவில் நடிக்கக்கூடாது என்று கண்டிஷனோடுதான் திருமணம் செய்துகொண்டார். ஆனால், என்ன நினைத்தாரோ தெரியவில்லை, தனது மனைவியை மீண்டும் சினிமாவில் நடிக்க ஒப்புதல் வழங்கினார் காட்டு ராஜா நடிகர்.
கணவரின் ஒப்புதலுடன் மீண்டும் சினிமாவுக்குள் பிரவேசம் செய்த நடிகைக்கு பெரிய வரவேற்பு கிடைத்தது. இதைத்தொடர்ந்து வாய்ப்புகளும் அவருக்கு குவியத் தொடங்கியது. இந்நிலையில்தான், தளபதி நடிகரின் புதிய படத்தில் சில்லென்ற நடிகை நடிக்க வாய்ப்பு தேடி வந்தது. நீண்ட இடைவெளிக்கு பிறகு தளபதி நடிகருடன் சேர்ந்து நடிப்பதில் ரொம்பவும் மகிழ்ச்சியாக இருந்தார் அந்த நடிகை.
ஆனால், என்ன நடந்ததோ தெரியவில்லை, திடீரென நடிகை அந்த படத்திலிருந்து விலகுவதாக அறிவித்தார். காரணம் கேட்டபோது, அது, இது என்று சொல்லி மழுப்பினார். இந்நிலையில், நடிகை தற்போது அந்த படத்திலிருந்து விலகியதற்கான காரணம் வெளியாகியுள்ளது.
அதாவது, மறுபடியும் நடிகை சினிமாவில் நடிக்க நுழையும்போது, யாருடனும் ஜோடியாக டூயட் பாடுவதோ, ஒட்டி உரசி நடிப்பதோ கூடாது என்ற கண்டிஷனோடுதான் அவரது காதல் கணவர் நடிக்க ஒப்புதல் வழங்கினாராம். அதை ஒப்புக்கொண்டே நடிகையும் சினிமாவில் மறு பிரவேசம் செய்துள்ளாராம்.
ஆனால், தளபதி நடிகரின் படத்தில் நடிகருடன் சேர்ந்து டூயட் பாடுவதுபோல் எல்லாம் காட்சிகள் இருப்பதால்தான் அப்படத்தில் நடிகை நடிக்க குடும்பத்தில் எதிர்ப்பு கிளம்பவே அதிலிருந்து அவர் விலகிவிட்டதாக கூறப்படுகிறது.
கணவரின் ஒப்புதலுடன் மீண்டும் சினிமாவுக்குள் பிரவேசம் செய்த நடிகைக்கு பெரிய வரவேற்பு கிடைத்தது. இதைத்தொடர்ந்து வாய்ப்புகளும் அவருக்கு குவியத் தொடங்கியது. இந்நிலையில்தான், தளபதி நடிகரின் புதிய படத்தில் சில்லென்ற நடிகை நடிக்க வாய்ப்பு தேடி வந்தது. நீண்ட இடைவெளிக்கு பிறகு தளபதி நடிகருடன் சேர்ந்து நடிப்பதில் ரொம்பவும் மகிழ்ச்சியாக இருந்தார் அந்த நடிகை.
ஆனால், என்ன நடந்ததோ தெரியவில்லை, திடீரென நடிகை அந்த படத்திலிருந்து விலகுவதாக அறிவித்தார். காரணம் கேட்டபோது, அது, இது என்று சொல்லி மழுப்பினார். இந்நிலையில், நடிகை தற்போது அந்த படத்திலிருந்து விலகியதற்கான காரணம் வெளியாகியுள்ளது.
அதாவது, மறுபடியும் நடிகை சினிமாவில் நடிக்க நுழையும்போது, யாருடனும் ஜோடியாக டூயட் பாடுவதோ, ஒட்டி உரசி நடிப்பதோ கூடாது என்ற கண்டிஷனோடுதான் அவரது காதல் கணவர் நடிக்க ஒப்புதல் வழங்கினாராம். அதை ஒப்புக்கொண்டே நடிகையும் சினிமாவில் மறு பிரவேசம் செய்துள்ளாராம்.
ஆனால், தளபதி நடிகரின் படத்தில் நடிகருடன் சேர்ந்து டூயட் பாடுவதுபோல் எல்லாம் காட்சிகள் இருப்பதால்தான் அப்படத்தில் நடிகை நடிக்க குடும்பத்தில் எதிர்ப்பு கிளம்பவே அதிலிருந்து அவர் விலகிவிட்டதாக கூறப்படுகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X