என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா
X
உச்ச நடிகருக்காக பாடல் இல்லாமல் உருவாகும் மெகா பட்ஜெட் இயக்குனரின் படம்
Byமாலை மலர்31 Oct 2016 12:51 PM GMT (Updated: 31 Oct 2016 12:51 PM GMT)
உச்ச நடிகருக்காக மெகா பட்ஜெட் இயக்குனரின் படத்தில் ஒரேயொரு பாடல் மட்டும்தான் இடம்பெறப்போவதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இதுகுறித்த செய்தியை கீழே பார்ப்போம்..
மெகா பட்ஜெட் இயக்குனர் தற்போது உச்ச நடிகரை வைத்து புதிய படமொன்றை இயக்கி வருகிறார். மெகா பட்ஜெட் இயக்குனரின் படத்தில் எப்போது பாடல் காட்சிகளுக்குத்தான் அதிக தொகை செலவழிக்கப்படும். ஆனால், உச்ச நடிகரை வைத்து இவர் இயக்கி வரும் புதிய படத்தில் ஒரேயொரு பாடல் காட்சி மட்டும்தான் இடம்பெறுவதாக வெளிவந்துள்ள செய்தி கோலிவுட்டில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஏன் இந்த படத்தில் ஒரேயொரு பாடல் காட்சி மட்டும் இடம்பெறுகிறது என்பது பற்றி விசாரிக்கையில், படத்தை இயக்குனர் ஹாலிவுட் தரத்திற்கு எடுக்கப் போகிறாராம். அதனால், ஹாலிவுட் படங்களைப் போன்று பாடல்களே இல்லாமல் உருவாக்கப் போவதாகத்தான் முதலில் முடிவு செய்திருந்தாராம். பின்னால், தமிழ் சினிமாவுக்கு அது எடுபடாமல் போய்விடும் என்பதாலேயே ஒரு பாடலையாவது படத்தில் வைப்போம் என்று முடிவு செய்து தற்போது ஒரேயொரு பாடலை மட்டும் இப்படத்தில் வைக்கப்போவதாக கூறப்படுகிறது. மற்றபடி, ஆல்பத்தில் மொத்தம் 6 பாடல்கள் இடம்பெறுவதாக கூறப்படுகிறது.
இது ஒரு காரணமாக கூறப்பட்டாலும், மற்றொரு காரணமும் கூறப்படுகிறது. உச்ச நடிகர் தற்போது உடல்நிலை சரியில்லாமல் அடிக்கடி அவருக்கு சிகிச்சை மேற்கொள்ள வேண்டியிருக்கிறது. சண்டைக் காட்சியிலாவது டூப் போட்டு நடிக்க வைக்கலாம். ஆனால், பாடல் காட்சியில் அப்படி செய்யமுடியாது. இதனால், அவரை கஷ்டப்படுத்தாமல் இருப்பதற்காக ஒரேயொரு பாடலை மட்டுமே படத்தில் வைக்க முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஏன் இந்த படத்தில் ஒரேயொரு பாடல் காட்சி மட்டும் இடம்பெறுகிறது என்பது பற்றி விசாரிக்கையில், படத்தை இயக்குனர் ஹாலிவுட் தரத்திற்கு எடுக்கப் போகிறாராம். அதனால், ஹாலிவுட் படங்களைப் போன்று பாடல்களே இல்லாமல் உருவாக்கப் போவதாகத்தான் முதலில் முடிவு செய்திருந்தாராம். பின்னால், தமிழ் சினிமாவுக்கு அது எடுபடாமல் போய்விடும் என்பதாலேயே ஒரு பாடலையாவது படத்தில் வைப்போம் என்று முடிவு செய்து தற்போது ஒரேயொரு பாடலை மட்டும் இப்படத்தில் வைக்கப்போவதாக கூறப்படுகிறது. மற்றபடி, ஆல்பத்தில் மொத்தம் 6 பாடல்கள் இடம்பெறுவதாக கூறப்படுகிறது.
இது ஒரு காரணமாக கூறப்பட்டாலும், மற்றொரு காரணமும் கூறப்படுகிறது. உச்ச நடிகர் தற்போது உடல்நிலை சரியில்லாமல் அடிக்கடி அவருக்கு சிகிச்சை மேற்கொள்ள வேண்டியிருக்கிறது. சண்டைக் காட்சியிலாவது டூப் போட்டு நடிக்க வைக்கலாம். ஆனால், பாடல் காட்சியில் அப்படி செய்யமுடியாது. இதனால், அவரை கஷ்டப்படுத்தாமல் இருப்பதற்காக ஒரேயொரு பாடலை மட்டுமே படத்தில் வைக்க முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X