search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    புதிய அவதாரம் எடுக்கும் பார்வதி
    X

    புதிய அவதாரம் எடுக்கும் பார்வதி

    தமிழில் பூ படம் மூலம் அறிமுகமாகி, சென்னையில் ஒரு நாள், மரியான் உள்ளிட்ட படங்களில் நடித்த பார்வதி புதிய அவதாரம் எடுக்க இருக்கிறார்.
    நடிகைகள் ஸ்ரீபிரியா, ரேவதி, கீது மோகன்தாஸ் போன்றவர்கள் இயக்குனர்களாகி உள்ளனர். பூ பார்வதியும் தற்போது டைரக்டராக மாறுகிறார். தான் விரும்பிய கதாபாத்திரத்தில் நடித்தாலும் அதிலும் சில சமரசங்கள் செய்து நடிக்க வேண்டி இருந்ததால் தானே இயக்குனர் ஆவது என்று முடிவு செய்திருக்கிறார்.

    இதுபற்றி பார்வதி கூறும்போது, ‘மிக விரைவில் நான் டைரக்‌‌ஷன் செய்ய இருக்கிறேன். இதற்கான முடிவை ஏற்கனவே எடுத்து முடித்துவிட்டேன். நடிகையாக எனக்கு இது திரையுலகில் மிக முக்கிய படமாக இருக்கும். 



    எனக்கு முக்கிய படம் என்பதைவிட என்னுள் புதைந்திருக்கும் இயற்கையின் வெளிப்பாடாக இருக்கும். நான் படம் இயக்குவது, ஒரு டைரக்டராக என்னை நிரூபிக்க வேண்டும் என்பதற்காக அல்ல. நேர்மையாக ஒரு கதையை சொல்ல வேண்டும் என்ற எண்ணமே காரணம்’ என்று கூறியுள்ளார்.
    Next Story
    ×