search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    நடிகர் பூவிலங்கு மோகன் கார் கண்ணாடியை உடைத்து கொள்ளை
    X

    நடிகர் பூவிலங்கு மோகன் கார் கண்ணாடியை உடைத்து கொள்ளை

    திரைப்படம் மற்றும் டி.வி.தொடர்களில் நடித்து வரும் பூவிலங்கு மோகனின் கார் கண்ணாடியை உடைத்து அதிலுள்ள பொருட்களை மர்ம நபர் திருடி சென்றுள்ளார். #PoovilanguMohan
    பூ விலங்கு படத்தில் அறிமுகமானவர் நடிகர் மோகன். இவர் பல்வேறு திரைப்படங்களிலும், டி.வி. தொடர்களிலும் நடித்துள்ளார். இவர் மந்தைவெளி பகுதியில் பொன்னியம்மன் கோவில் தெருவில் நேற்று முன்தினம் மதியம் 2 மணி அளவில் தனது காரை நிறுத்தினார். பின்னர் அப்பகுதியில் உள்ள அரங்கம் ஒன்றில் நடைபெற்ற நாடக ஒத்திகையில் கலந்து கொண்டார்.

    எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவையொட்டி நடத்தப்பட்ட நாடகத்துக்கான ஒத்திகையில் பங்கேற்று விட்டு இரவு 8 மணி அளவில் பூவிலங்கு மோகன் திரும்பினார். அப்போது அவரது கார் கண்ணாடி உடைக்கப்பட்டிருந்தது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த மோகன் காரின் கதவை திறந்து உள்ளே பார்த்தார். அப்போது இருக்கையில் வைக்கப்பட்டிருந்த பை காணாமல் போயிருந்தது.



    அதில் பாஸ்போர்ட், மற்றும் சில கதை சம்பந்தமான ஆவணங்கள் இருந்தன. ரூ.2 ஆயிரம் பணமும் இருந்தது. இவை அனைத்தையும் யாரோ திருடிச்சென்றுள்ளனர்.

    இதுபற்றி பூவிலங்கு மோகன், அபிராமபுரம் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் அஜீகுமார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். கொள்ளையர்கள் யார்? என்பது தெரியவில்லை. அவர்களை போலீசார் தேடி வருகிறார்கள். அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்கள் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன.
    Next Story
    ×