search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    பெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமையை தடுக்க வேண்டும் - பா.இரஞ்சித்
    X

    பெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமையை தடுக்க வேண்டும் - பா.இரஞ்சித்

    தென்னிந்திய திரைத்துறை பெண்கள் மையத்தின் அறிமுக விழாவில் கலந்துக் கொண்ட இயக்குனர் பா.இரஞ்சித், பெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமையை தடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார். #PaRanjith
    தென்னிந்திய திரைத்துறை பெண்கள் மையத்தின் அறிமுக விழா சென்னையில் நடைபெற்றது. இதில் பா.இரஞ்சித், பி.சி.ஸ்ரீராம், சத்யராஜ், ரேவதி, அதிதி மேனன், ரோகினி, பாலாஜி சக்திவேல், புஷ்கர் காயத்திரி, அம்பிகா, சச்சு, சரோஜா தேவி, பிரேம் பெண்கள் மைய தலைவர் வைசாலி சுப்பிரமணியன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். விழாவில் இயக்குநர் பா.இரஞ்சித் பேசும் போது,

    “இது பெண்களுக்காக பெண்களாலே உருவாக்கப்பட்ட சங்கம். அதை நான் ரொம்ப சூப்பரா பார்க்கிறேன். பெண்கள் ஏதோ ஒரு உறவு முறையில் ஒதுக்கப்படுகிறார்கள். அதையும் தாண்டி சில பெண்கள் ஒதுக்குதலை எதிர்க்கிறார்கள். அவர்களின் வெளிப்பாடாக இந்த சங்கத்தை நான் பார்க்கிறேன்.

    இந்த சங்கம் ரொம்ப வீரியமாக செயல் பட வேண்டும். பெண்கள் மீதான பாலியல் சுரண்டல் போன்றதை தடுக்க வேண்டும். வீட்டை விட்டு வெளிவரும் பெண்கள் வேலை பார்க்கும் இடத்தில் பாலியல் தொந்தரவுக்கு ஆளாகிறார்கள். சமீபத்தில் பாலியலுக்கு ஆளான பெண்ணை பற்றி கூறும் போது, அவள் ஒழுங்காக ஆடை அணியவில்லை என்கிறார்கள். குழந்தைகளும் தான் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படுகிறார்கள். குழந்தைகளுக்கு ஆடை காரணமா?

    பெண்கள் மீது நடக்கும் பாலியல் கொடுமைக்கு அவர்கள் தான் காரணம் என்று சொல்கிறார்கள். இதை உடைக்க வேண்டும். அதை ஏற்றுக்கொள்ள மறுக்கும் ஆட்களாக நாம் மாற வேண்டும். அதற்கு இந்த சங்கம் உறுதுணையாக இருக்கும் என நம்புகிறேன். நமக்கு தேவையானதை நாம் போராடினால் மட்டும் தான் பெற முடியும். பிரச்சினைகளை தீர்க்கும் சங்கமாக இது இருக்கும் என நம்புகிறேன்” என்றார்.
    Next Story
    ×