என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா
X
கார்த்திக் நரேனின் அடுத்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு
Byமாலை மலர்15 Feb 2018 1:37 PM GMT (Updated: 15 Feb 2018 1:37 PM GMT)
கார்த்திக் நரேன் இயக்கத்தில் `நரகாசூரன்' படம் ரிலீசுக்கு தயாராகி இருக்கும் நிலையில், அவரது அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
`துருவங்கள் பதினாறு' படத்தின் வெற்றியை தொடர்ந்து கார்த்திக் நரேன் அடுத்ததாக `நரகாசூரன்' படத்தை இயக்கி முடித்திருக்கிறார்.
அரவிந்த்சாமி, சந்தீப் கிஷன், இந்திரஜித் சுகுமாரன், ஸ்ரியோ சரண், ஆத்மிகா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இந்த படம் விரைவில் வெளியாக இருக்கிறது.
இந்நிலையில், தனது அடுத்த படத்திற்கான வேலைகளில் பிசியாகி விட்டார் கார்த்திக் நரேன். அந்த படத்தின் பெயர் இன்று 5 மணிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி கார்த்திக் நரேன் அடுத்ததாக இயக்கும் படத்துக்கு `நாடக மேடை' என்று தலைப்பு வைத்துள்ளனர். இப்படத்தை கார்த்திக் நரேன் அவரது சொந்த தயாரிப்பு நிறுவனமான `நைட் நோஸ்டால்ஜியா பிலிமோடெயின்மெண்ட்' மூலம் தயாரிக்கிறார்.
இந்த படத்திற்கு சுஜித் சரங் ஒளிப்பதிவு செய்ய ரோன் ஈத்தன் யோகன் இசையமைக்கிறார். ஸ்ரீஜித் சரங் படத்தொகுப்பு பணிகளையும், சிவசங்கர் கலை பணிகளையும் மேற்கொள்கின்றனர்.
இந்த படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகள் குறித்த விவரம் விரைவில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X