என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா
X
போதை பொருள் கும்பலுடன் தொடர்பு: நடிகர்-நடிகைகளிடம் நாளை விசாரணை
Byமாலை மலர்18 July 2017 10:14 AM GMT (Updated: 18 July 2017 10:14 AM GMT)
போதை பொருள் கும்பலுடன் தொடர்பு வைத்திருந்ததாக கூறப்பட்ட வழக்கில் தெலுங்கு நடிகர் - நடிகைகளிடம் நாளை முதல் விசாரணை நடத்தப்படுகிறது.
ஐதராபாத் நகரில் கடந்த சில நாட்களுக்கு முன்பு போதை பொருள் கும்பல் சிக்கியது. விசாரணையில் அவர்களுடன் தெலுங்கு நடிகர் - நடிகைகளுக்கு தொடர்பு இருப்பது அம்பலமானது.
அவர்களின் செல்போன் எண்கள் போதை பொருள் கும்பலிடம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இது தொடர்பாக நடிகர்கள் ரவிதேஜா, நவ்தீப், தருண், நந்து, தனிஷ், சுப்பராஜு, நடிகைகள் சார்மி, முமைத்கான், இயக்குனர் பூரிஜெகனாத், ஒளிப்பதிவாளர் ஷியாம் கே நாயுடு, கலை இயக்குனர் ஜின்னா ஆகியோருக்கு நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி சிறப்பு விசாரணை குழு நோட்டீஸ் அனுப்பியது.
இந்த நிலையில் நடிகர் - நடிகைகளிடம் விசாரணை நாளை தொடங்குகிறது.
யார் - யார் எந்த தேதியில் ஆஜராக வேண்டும் என்று போலீசார் நேற்று வெளியிட்டனர். அதன்படி நாளை இயக்குனர் பூரி ஜெகநாத் ஆஜராக உத்தரவிட்டு உள்ளனர்.
20-ந் தேதி நடிகை சார்மி, 21-ந் தேதி முமைத்கான், 22-ந் தேதி சுப்பராஜு, 23-ந் தேதி ஷியாம் கே நாயுடு, 24-ந் தேதி ரவிதேஜா, 25-ந் தேதி ஜின்னா, 26-ந் தேதி நவ்தீப், 27-ந் தேதி தருண், 28-ந் தேதி நந்து, 29-ந் தேதி தனிஷ் ஆகியோர் ஆஜராக உத்தரவிட்டுள்ளனர்.
இவர்களிடம் விசாரணை முடிந்த பிறகு மேலும் பல திரையுலக பிரமுகர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப போலீசார் முடிவு செய்துள்ளனர்.
அவர்களின் செல்போன் எண்கள் போதை பொருள் கும்பலிடம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இது தொடர்பாக நடிகர்கள் ரவிதேஜா, நவ்தீப், தருண், நந்து, தனிஷ், சுப்பராஜு, நடிகைகள் சார்மி, முமைத்கான், இயக்குனர் பூரிஜெகனாத், ஒளிப்பதிவாளர் ஷியாம் கே நாயுடு, கலை இயக்குனர் ஜின்னா ஆகியோருக்கு நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி சிறப்பு விசாரணை குழு நோட்டீஸ் அனுப்பியது.
இந்த நிலையில் நடிகர் - நடிகைகளிடம் விசாரணை நாளை தொடங்குகிறது.
யார் - யார் எந்த தேதியில் ஆஜராக வேண்டும் என்று போலீசார் நேற்று வெளியிட்டனர். அதன்படி நாளை இயக்குனர் பூரி ஜெகநாத் ஆஜராக உத்தரவிட்டு உள்ளனர்.
20-ந் தேதி நடிகை சார்மி, 21-ந் தேதி முமைத்கான், 22-ந் தேதி சுப்பராஜு, 23-ந் தேதி ஷியாம் கே நாயுடு, 24-ந் தேதி ரவிதேஜா, 25-ந் தேதி ஜின்னா, 26-ந் தேதி நவ்தீப், 27-ந் தேதி தருண், 28-ந் தேதி நந்து, 29-ந் தேதி தனிஷ் ஆகியோர் ஆஜராக உத்தரவிட்டுள்ளனர்.
இவர்களிடம் விசாரணை முடிந்த பிறகு மேலும் பல திரையுலக பிரமுகர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப போலீசார் முடிவு செய்துள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X