என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா
X
அன்பானவன் அசராதவன் அடங்காதவன் இரண்டு பாகமானது சிம்பு ஐடியாதான்: ஆதிக் ரவிச்சந்திரன்
Byமாலை மலர்27 April 2017 6:44 AM GMT (Updated: 27 April 2017 6:44 AM GMT)
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகிவரும் ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படம் இரண்டு பாகமாக ஆனது சிம்பு ஐடியாதான் என்று அவரே தெரிவித்துள்ளார்.
சிம்பு நடிப்பில் உருவாகிவரும் ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ படம் இரண்டு பாகங்களாக வெளிவருவதாக சமீபத்தில் சிம்பு அறிவித்திருந்தார். ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கிவரும் இப்படத்தில் சிம்பு, அஸ்வின் தாத்தா, மதுர மைக்கேல் உள்ளிட்ட 4 கெட்டப்புகளில் நடித்து வருகிறார். ஸ்ரேயா, தமன்னா, சானா கான் ஆகியோர் கதாநாயகிகளாக நடித்து வருகின்றனர்.
இந்நிலையில், இப்படம் இரண்டு பாகங்களாக வெளியிடுவது குறித்து திடீரென அறிவிப்பு வெளியானது அனைவரையும் ஆச்சர்யத்தையும், கேள்வியையும் எழுப்பியது. இதுகுறித்து சமீபத்தில் ஆதிக் ரவிச்சந்திரன் விளக்கம் அளித்துள்ளார்.
அவர் கூறும்போது, இப்படத்தில் மதுர மைக்கேல், அஸ்வின் தாத்தா ஆகிய கதாபாத்திரங்களின் காட்சிகளை பார்த்தபோதே கிட்டத்தட்ட இரண்டரை மணி நேரத்திற்கும் மேலாக சென்றது. எனவே, சிம்பு இப்படத்தை இரண்டு பாகமாக எடுக்கலாம் என்று கூறினார். அதனால்தான் தற்போது அறிவித்தோம் என்று கூறியுள்ளார்.
இப்படத்தின் முதல்பாகம் ரம்ஜான் தினத்தையொட்டி வெளியாகவிருக்கிறது. இரண்டாம் பாகம் கிறிஸ்துமஸ் தினத்தையொட்டி வெளியாகவிருக்கிறது. யுவன் இசையமைத்துள்ள இப்படத்தின் பாடல்கள் விரைவில் வெளியாகவிருக்கிறது.
இந்நிலையில், இப்படம் இரண்டு பாகங்களாக வெளியிடுவது குறித்து திடீரென அறிவிப்பு வெளியானது அனைவரையும் ஆச்சர்யத்தையும், கேள்வியையும் எழுப்பியது. இதுகுறித்து சமீபத்தில் ஆதிக் ரவிச்சந்திரன் விளக்கம் அளித்துள்ளார்.
அவர் கூறும்போது, இப்படத்தில் மதுர மைக்கேல், அஸ்வின் தாத்தா ஆகிய கதாபாத்திரங்களின் காட்சிகளை பார்த்தபோதே கிட்டத்தட்ட இரண்டரை மணி நேரத்திற்கும் மேலாக சென்றது. எனவே, சிம்பு இப்படத்தை இரண்டு பாகமாக எடுக்கலாம் என்று கூறினார். அதனால்தான் தற்போது அறிவித்தோம் என்று கூறியுள்ளார்.
இப்படத்தின் முதல்பாகம் ரம்ஜான் தினத்தையொட்டி வெளியாகவிருக்கிறது. இரண்டாம் பாகம் கிறிஸ்துமஸ் தினத்தையொட்டி வெளியாகவிருக்கிறது. யுவன் இசையமைத்துள்ள இப்படத்தின் பாடல்கள் விரைவில் வெளியாகவிருக்கிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X