search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    `ஜோக்கர் பட நாயகியை பாராட்டிய சமுத்திரக்கனி
    X

    `ஜோக்கர்' பட நாயகியை பாராட்டிய சமுத்திரக்கனி

    `ஜோக்கர்' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த நாயகி ரம்யா பாண்டியனை நடிகரும், இயக்குநருமான சமுத்திரக்கனி பாராட்டியுள்ளார்.
    தேசிய விருது பெற்ற ‘ஜோக்கர்’ படத்தில் ராஜு முருகன் இயக்கத்தில் நாயகியாக நடித்தவர் ரம்யா பாண்டியன். அடுத்து தாமிரா இயக்கும் ‘ஆண் தேவதை’ படத்தில் சமுத்திரகனி ஜோடியாக நடித்திருக்கிறார். இதுபற்றி ரம்யாபாண்டியனிடம் கேட்ட போது...

    `ஜோக்கர்’ படத்தை விட இதில் வித்தியாசமான வேடம். முதல் படத்தில் அதிகமாக பேசவில்லை. இதில் நிறைய வசனம் பேசி நடித்திருக்கிறேன். இந்த படத்தில் என்னை வித்தியாசமான கோணத்தில் பார்க்கலாம். ‘ஜோக்கர்’ படத்தை போலவே ‘ஆண் தேவதை’ படத்திலும் எனக்கு நானே டப்பிங் பேசுகிறேன்.



    இந்த படத்தில் எனது நடிப்பை பார்த்து விட்டு ‘பயங்கரமா பண்றியேம்மா’ என்று சமுத்திரகனி சார் பாராட்டினார். ‘ஜோக்கர்’ படத்தில் என் நடிப்பை பார்த்து இந்த படத்துக்கு என்னை பரிந்துரை செய்ததும் அவர்தான். இந்த படத்தில் இயக்குனர் தாமிரா, யாராவது நன்றாக நடித்தால் அவர்களை பாராட்டி சிறிதாக பணப் பரிசு கொடுப்பார். ஒரு சீனில் நான் நன்றாக நடித்ததை பாராட்டி எனக்கும் பணப் பரிசு கொடுத்தார். அது எனக்கு விருது கிடைத்தது போன்ற திருப்தியை தந்தது.

    அடுத்து எந்த மாதிரி படங்களில் நடிக்க வேண்டும் என்று திட்டமிடவில்லை. எதைப்பற்றியும் முடிவு செய்யாமல் கதை கேட்கிறேன். கதையும் எனது பாத்திரமும் பிடித்து இருந்தால் அதில் நடிப்பேன்” என்றார்.

    Next Story
    ×