என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா
X
‘பசங்க’ பாண்டியின் நடிப்பை பார்த்து கால்ஷீட் கொடுத்த ‘கயல்’ ஆனந்தி
Byமாலை மலர்21 April 2017 12:11 PM GMT (Updated: 21 April 2017 12:11 PM GMT)
என் ஆளோட செருப்பை காணோம் படத்தில் பாண்டிக்கு ஜோடியாக நடிப்பதற்கு அவருடைய நடிப்பை பார்த்துதான் கயல் ஆனந்தி கால்ஷீட் கொடுத்துள்ளார்.
‘கோடம்பாக்கம்’, ‘ராமன் தேடிய சீதை’ போன்ற எதார்த்த படங்களைக் கொடுத்தவர் ஜெகன்நாத். இவர் இயக்கும் புதிய படத்துக்கு ‘என் ஆளோட செருப்பை காணோம்’ என்று டைட்டில் வைத்திருக்கிறார். ட்ரம்ஸ்டிக் புரொடக்ஷன்ஸ் சார்பில் வெடிக்காரன்பட்டி எஸ்.சக்திவேல் தன் சகோதரர் விஜயன் உடன் இணைந்து இப்படத்தை தயாரித்திருக்கிறார்.
இப்படத்தில் ‘பசங்க’ படத்தில் நடித்த பாண்டி ‘தமிழ்’ என்கிற பெயர் மாற்றத்தோடு நாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக ‘கயல்’ ஆனந்தி நடித்திருக்கிறார். படத்தின் டைட்டிலைக் கேட்டவுடனே படத்தில் ஏதாவது சுவாரஸ்யம் இருக்கும் என்று அனைவருக்கும் ஒரு எதிர்பார்ப்பு இருக்கிறது. அதற்கான காரணத்தை இயக்குனரே தெரிவித்துள்ளார்.
செருப்பை நாம ஒரு சாதாரண பொருளாகத்தான் பார்க்கிறோம். அதற்கு அவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறதில்ல. ஆனா அது நம்மோட வாழ்க்கையிட பல சம்பவங்களை நடத்திட்டுப் போயிடும். இப்படத்திற்கு நாயகனாக நடிக்க பாண்டியை என்னுடைய நண்பர்கள் சிபாரிசு செய்தார்கள். நானும் தயக்கத்துடனயே பாண்டியிடம் சென்று இப்படத்தில் இடம்பெறும் ஒரு காட்சியை நடித்துக் காட்டச் சொன்னேன்.
அந்த காட்சியை நான் எதிர்பார்த்த மாதிரியே பாண்டி நடித்துக் காட்டினார். உடனேயே அவரை இப்படத்திற்கு புக் செய்துவிட்டேன். பாண்டிதான் ஹீரோ என்றதும் ஆனந்தி இதில் நடிக்க கொஞ்சம் தயங்கினார். அப்புறம், நானே அவருக்கு நேரடியாக சென்று பாண்டி நடித்துக்காட்டிய வீடியோவை காட்டியதும் ஆனந்தி ஒத்துக்கொண்டார். கால்ஷிட் சொதப்பல் இல்லாமலும் நடித்துக் கொடுத்துள்ளார்.
செருப்பும், மழையும் படத்தின் பெரும்பாலான காட்சிகளை ஆக்கிரமித்திருப்பதால் பெரும்பாலான காட்சிகளை கடலூர் மற்றும் அதைச்சுற்றியுள்ள பகுதிகளில் நிஜ மழையில் எடுத்திருக்கிறார்கள். யோகி பாபு, சிங்கம் புலி, பால சரவணன் என தமிழில் இப்போதைக்கு இருக்கிற அத்தனை காமெடியன்களையும் இந்தப் படத்தில் இடம்பெற்றிருக்கிறார்கள்.
இப்படத்தில் ‘பசங்க’ படத்தில் நடித்த பாண்டி ‘தமிழ்’ என்கிற பெயர் மாற்றத்தோடு நாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக ‘கயல்’ ஆனந்தி நடித்திருக்கிறார். படத்தின் டைட்டிலைக் கேட்டவுடனே படத்தில் ஏதாவது சுவாரஸ்யம் இருக்கும் என்று அனைவருக்கும் ஒரு எதிர்பார்ப்பு இருக்கிறது. அதற்கான காரணத்தை இயக்குனரே தெரிவித்துள்ளார்.
செருப்பை நாம ஒரு சாதாரண பொருளாகத்தான் பார்க்கிறோம். அதற்கு அவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறதில்ல. ஆனா அது நம்மோட வாழ்க்கையிட பல சம்பவங்களை நடத்திட்டுப் போயிடும். இப்படத்திற்கு நாயகனாக நடிக்க பாண்டியை என்னுடைய நண்பர்கள் சிபாரிசு செய்தார்கள். நானும் தயக்கத்துடனயே பாண்டியிடம் சென்று இப்படத்தில் இடம்பெறும் ஒரு காட்சியை நடித்துக் காட்டச் சொன்னேன்.
அந்த காட்சியை நான் எதிர்பார்த்த மாதிரியே பாண்டி நடித்துக் காட்டினார். உடனேயே அவரை இப்படத்திற்கு புக் செய்துவிட்டேன். பாண்டிதான் ஹீரோ என்றதும் ஆனந்தி இதில் நடிக்க கொஞ்சம் தயங்கினார். அப்புறம், நானே அவருக்கு நேரடியாக சென்று பாண்டி நடித்துக்காட்டிய வீடியோவை காட்டியதும் ஆனந்தி ஒத்துக்கொண்டார். கால்ஷிட் சொதப்பல் இல்லாமலும் நடித்துக் கொடுத்துள்ளார்.
செருப்பும், மழையும் படத்தின் பெரும்பாலான காட்சிகளை ஆக்கிரமித்திருப்பதால் பெரும்பாலான காட்சிகளை கடலூர் மற்றும் அதைச்சுற்றியுள்ள பகுதிகளில் நிஜ மழையில் எடுத்திருக்கிறார்கள். யோகி பாபு, சிங்கம் புலி, பால சரவணன் என தமிழில் இப்போதைக்கு இருக்கிற அத்தனை காமெடியன்களையும் இந்தப் படத்தில் இடம்பெற்றிருக்கிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X