என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா
X
கவர்ச்சிக்கு ‘நோ’ சொல்லும் பூனம் பாஜ்வா
Byமாலை மலர்21 April 2017 10:38 AM GMT (Updated: 21 April 2017 10:38 AM GMT)
சமீபகாலமாக கவர்ச்சி வேடங்களில் நடித்து வந்த பூனம் பாஜ்வா இனிமேல் கவர்ச்சி வேடங்களில் நடிக்கமாட்டேன் என்று கூறியுள்ளார்.
‘சேவல்’, ‘கச்சேரி ஆரம்பம்’, ‘துரோகி’, ‘தம்பிக்கோட்டை’ உள்ளிட்ட படங்களில் கதாநாயகியாக நடித்தவர் பூனம் பாஜ்வா. இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே பெரிய அளவில் வெற்றி பெறாததால், திறமை இருந்தும் இவரால் சினிமாவில் முன்னுக்கு வரமுடியாத சூழ்நிலை உருவானது.
இந்நிலையில், ஜெயம் ரவி நடிப்பில் வெளிவந்த ‘ரோமியோ ஜுலியட்’, சுந்தர்.சி இயக்கத்தில் வெளிவந்த ‘அரண்மணை 2’, சுந்தர் சி நடித்த ‘முத்தின கத்திரிக்கா’ ஆகிய படங்கள் பூனம் பாஜ்வாவை மீண்டும் திரும்பி பார்க்க வைத்தது. இப்படங்களில் பூனம் பாஜ்வா கவர்ச்சியிலும் தாராளம் காட்டியிருந்தார்.
தற்போது பூனம் பாஜ்வா ‘குப்பத்து ராஜா’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை டான்ஸ் மாஸ்டர் பாபா பாஸ்கர் இயக்கி வருகிறார். இப்படத்தில் பூனம் பாஜ்வாவுக்கு அழுத்தமான நாயகி வேடமாம். இப்படத்தில் புடவை கட்டி குடும்ப பெண்ணாகவும் நடிக்கிறாராம். இதன்மூலம் தனக்கு நல்ல நடிகை என்ற பெயர் வரும் என்று நம்பிக்கையுடன் கூறுகிறார். இதனால், இனிமேல் கவர்ச்சி வேடங்களில் நடிக்க மாட்டேன் என்று கூறி வருகிறாராம். தன்னை தேடிவந்த சில கவர்ச்சி வேடங்களிலும் நடிக்க மறுத்துவிட்டாராம்.
இந்நிலையில், ஜெயம் ரவி நடிப்பில் வெளிவந்த ‘ரோமியோ ஜுலியட்’, சுந்தர்.சி இயக்கத்தில் வெளிவந்த ‘அரண்மணை 2’, சுந்தர் சி நடித்த ‘முத்தின கத்திரிக்கா’ ஆகிய படங்கள் பூனம் பாஜ்வாவை மீண்டும் திரும்பி பார்க்க வைத்தது. இப்படங்களில் பூனம் பாஜ்வா கவர்ச்சியிலும் தாராளம் காட்டியிருந்தார்.
தற்போது பூனம் பாஜ்வா ‘குப்பத்து ராஜா’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை டான்ஸ் மாஸ்டர் பாபா பாஸ்கர் இயக்கி வருகிறார். இப்படத்தில் பூனம் பாஜ்வாவுக்கு அழுத்தமான நாயகி வேடமாம். இப்படத்தில் புடவை கட்டி குடும்ப பெண்ணாகவும் நடிக்கிறாராம். இதன்மூலம் தனக்கு நல்ல நடிகை என்ற பெயர் வரும் என்று நம்பிக்கையுடன் கூறுகிறார். இதனால், இனிமேல் கவர்ச்சி வேடங்களில் நடிக்க மாட்டேன் என்று கூறி வருகிறாராம். தன்னை தேடிவந்த சில கவர்ச்சி வேடங்களிலும் நடிக்க மறுத்துவிட்டாராம்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X