search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    நடிகை பாவனா வழக்கில் 7 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்
    X

    நடிகை பாவனா வழக்கில் 7 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்

    நடிகை பாவனாவை காரில் கடத்தி பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் 7 பேர் மீது கோர்ட்டில் போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர். இது குறித்த விரிவான செய்தியை பார்க்கலாம்.
    தமிழ், மலையாளம், கன்னட பட உலகில் முன்னணி கதாநாயகியாக இருந்த பாவனாவை கடந்த பிப்ரவரி மாதம் சிலர் காரில் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்தனர். கேரள மாநிலத்தில் உள்ள எர்ணாகுளத்தில் படப்பிடிப்பில் கலந்துகொண்டு விட்டு அவர் வீட்டுக்கு திரும்பியபோது இந்த கடத்தல் சம்பவம் நடந்தது. 25 கிலோ மீட்டர் தூரத்துக்கு அவரை காரில் வைத்து செக்ஸ் தொல்லை கொடுத்து பணம் பறிப்பதற்காக அதனை வீடியோவிலும் பதிவு செய்துகொண்டனர்.

    பாவனா போலீசில் புகார் செய்ததை தொடர்ந்து கடத்தலில் ஈடுபட்டவர்களும், அவர்களுக்கு உதவியவர்களும் உடனடியாக கைது செய்யப்பட்டனர். பாவனாவின் முன்னாள் கார் டிரைவரான பெரும்பாவூரை சேர்ந்த பல்சர் சுனில் என்ற சுனில்குமார் இந்த சம்பவத்தில் மூளையாக இருந்து செயல்பட்டது விசாரணையில் தெரியவந்தது.



    இந்த கடத்தல் விவகாரம் பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தியது. குற்றவாளிகளை கடுமையாக தண்டிக்க வேண்டும் என்று நடிகர்-நடிகைகள் வற்புறுத்தினார்கள். போலீஸ் துணை சூப்பிரண்டு பாபுகுமார் தலைமையில் தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தினார்கள். பாவனா கடத்தப்பட்ட இடத்துக்கு குற்றவாளிகளை அழைத்து சென்று ஆதாரங்களை திரட்டினார்கள். அந்த பகுதியில் சாலைகளில் அமைக்கப்பட்டு இருந்த சி.சி.டி.வி கேமராக்களையும் ஆய்வு செய்தனர்.

    குற்றவாளிகள் பதுங்கி இருந்த கோவை பகுதிக்கு சென்றும் விசாரணை நடத்தி குற்றப்பத்திரிகை தயார் செய்தனர். தற்போது 7 பேர் மீது அங்கமாலி நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.இதில் பல்சர் சுனில் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டு உள்ளார். பாவனா காரில் செல்வது குறித்து பல்சர் சுனிலுக்கு தகவல் தெரிவித்த டிரைவர் மார்ட்டின் ஆண்டனி, கூலிப்படையை சேர்ந்த சலீம், பிரதீப், விஜிஸ், மணிகண்டன், கோவையில் தலைமறைவாக இருக்க உதவிய சார்லி தாமஸ் ஆகியோர் மீதும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.

    மேலும் பலரிடம் விசாரணை நடத்தவும் போலீசார் திட்டமிட்டு உள்ளனர். இதன் மூலம் பாவனா கடத்தல் வழக்கு விசாரணை தீவிரமடைந்து உள்ளது.
    Next Story
    ×