என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா
X
மும்பையை கலக்கிய பிரபல தமிழ் தாதா ஹாஜி மஸ்தான் வாழ்க்கை வரலாற்றில் ரஜினி நடிக்கிறாரா?
Byமாலை மலர்20 April 2017 11:59 AM GMT (Updated: 20 April 2017 11:59 AM GMT)
பிரபல தாதா ஹாஜி மஸ்தானின் வாழ்க்கை வரலாற்றில் ரஜினி நடிக்கப்போவதாக ஒரு செய்தி வெளிவந்துள்ளது. அது உண்மைதானா? என்பதை கீழே பார்ப்போம்.
‘கபாலி’ படத்தை தொடர்ந்து ரஜினி-ரஞ்சித் இருவரும் மீண்டும் புதிய படத்தில் இணையவிருக்கிறார்கள். இப்படத்தை தனுஷ் தனது வுண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிக்கவிருக்கிறார். ‘கபாலி’ படத்தைப் போன்றே இப்படத்திலும் ரஜினி டானாக நடிக்கப்போவதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
இந்நிலையில், தற்போது மும்பையில் மிகப்பெரிய டானாக வலம்வந்த தமிழர் மிர்ஜா காஜி மஸ்தானின் வாழ்க்கையை மையப்படுத்தி இப்படத்தை எடுக்கப்போவதாக செய்திகள் வெளிவந்துள்ளது. மும்பையில் 1926-1994 இடைப்பட்ட காலத்தில் மக்களின் தலைவராகவும், மிகப்பெரிய டானாகவும் வலம்வந்தவர் ஹாஜி மஸ்தான்.
இவர் மிகப்பெரிய கடத்தல்காரராகவும், சினிமா படங்களுக்கு பைனான்ஸ் செய்பவராகவும், ரியல் எஸ்டேட் அதிபராகவும் வலம் வந்தவர். தமிழ் சரளமாக பேசக்கூடியவர். இவர் எப்போதும் வெள்ளை நிறத்தாலான உடைகள், காலணிகள்தான் அணிவாராம். அதேபோல், விலையுயர்ந்த சிகரெட்டுகள்தான் புகைப்பாராம். வெள்ளைக்கலர் மெர்சிடிஸ் கார்தான் உபயோகிப்பாராம். இதுவே இவரை ஏழைகளின் மத்தியில் அவரை ஸ்டைல் மன்னாக எடுத்துக்காட்டியது.
அப்படிப்பட்டவரின் வாழ்க்கை வரலாற்றைத்தான் பா.ரஞ்சித் படமாக எடுக்கப்போவதாகவும் ஹாஜி மஸ்தான் கதாபாத்திரத்தில் ரஜினி நடிக்கப்போவதாக செய்திகள் வெளிவந்துள்ளது. ஆனால், ரஞ்சித் தரப்பிலோ ஹாஜி மஸ்தானின் வாழ்க்கை வரலாற்றை படமாக எடுக்கவில்லை என்று கூறுகின்றனர். இருப்பினும், இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், தற்போது மும்பையில் மிகப்பெரிய டானாக வலம்வந்த தமிழர் மிர்ஜா காஜி மஸ்தானின் வாழ்க்கையை மையப்படுத்தி இப்படத்தை எடுக்கப்போவதாக செய்திகள் வெளிவந்துள்ளது. மும்பையில் 1926-1994 இடைப்பட்ட காலத்தில் மக்களின் தலைவராகவும், மிகப்பெரிய டானாகவும் வலம்வந்தவர் ஹாஜி மஸ்தான்.
இவர் மிகப்பெரிய கடத்தல்காரராகவும், சினிமா படங்களுக்கு பைனான்ஸ் செய்பவராகவும், ரியல் எஸ்டேட் அதிபராகவும் வலம் வந்தவர். தமிழ் சரளமாக பேசக்கூடியவர். இவர் எப்போதும் வெள்ளை நிறத்தாலான உடைகள், காலணிகள்தான் அணிவாராம். அதேபோல், விலையுயர்ந்த சிகரெட்டுகள்தான் புகைப்பாராம். வெள்ளைக்கலர் மெர்சிடிஸ் கார்தான் உபயோகிப்பாராம். இதுவே இவரை ஏழைகளின் மத்தியில் அவரை ஸ்டைல் மன்னாக எடுத்துக்காட்டியது.
அப்படிப்பட்டவரின் வாழ்க்கை வரலாற்றைத்தான் பா.ரஞ்சித் படமாக எடுக்கப்போவதாகவும் ஹாஜி மஸ்தான் கதாபாத்திரத்தில் ரஜினி நடிக்கப்போவதாக செய்திகள் வெளிவந்துள்ளது. ஆனால், ரஞ்சித் தரப்பிலோ ஹாஜி மஸ்தானின் வாழ்க்கை வரலாற்றை படமாக எடுக்கவில்லை என்று கூறுகின்றனர். இருப்பினும், இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X