search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    என்னை நிம்மதியாக வாழ விடுங்கள்: மைனா நந்தினி உருக்கம்
    X

    என்னை நிம்மதியாக வாழ விடுங்கள்: 'மைனா' நந்தினி உருக்கம்

    என்னை நிம்மதியாக வாழவிடுங்கள் என்று மைனா நந்தினி உருக்கமாக பேசியுள்ளார். இதுகுறித்த செய்தியை கீழே விரிவாக பார்ப்போம்.
    சின்னத்திரை நடிகை ‘மைனா’ நந்தினியின் கணவர் கார்த்திக் சமீபத்தில் தற்கொலை செய்து கொண்டார். அவருடைய சாவுக்கு நந்தினியும், அவரது தந்தையும் தான் காரணம் என்று கார்த்திக் பெற்றோர் போலீசில் புகார் செய்துள்ளனர்.

    இதுகுறித்து கூறிய ‘மைனா’ நந்தினி, “காதலித்து திருமணம் செய்து கொண்டதுதான் வாழ்க்கையில் நான் செய்த மிகப்பெரிய தவறு. கணவருடன் வாழ்ந்த ஆரம்ப காலத்தில் சந்தோ‌ஷமாகத்தான் இருந்தேன். கடந்த 3 மாதமாக அவரது அன்பு குறைய ஆரம்பித்தது. ஒத்துப்போகவில்லை. அதனால் விலகி இருந்தேன்.



    அவருடைய திடீர் மரணம் என் வாழ்க்கையை புரட்டிப் போட்டு விட்டது. அதைவிட கணவரின் பெற்றோர் என் மீது சுமத்தும் அவதூறுகளைத்தான் தாங்கிக் கொள்ள முடியவில்லை. ஒரு பெண்ணாக நான் எல்லா அவமானங்களையும் சந்தித்து விட்டேன். நான் ஏமாந்து விட்டேன். ஏமாற்றப்பட்டு விட்டேன்.

    கார்த்தி இறந்த உடனே, நானும் இறந்திருக்க வேண்டும். என்றாலும், அதனால் எந்த பிரச்சினையும் தீரப்போவது இல்லை. எனவே, என்னை நம்பி இருக்கும் பெற்றோருக்கு ஏதாவது செய்ய வேண்டும். அதற்காக வாழ்கிறேன். இப்போது வலிகளுடன் போராடிக் கொண்டிருக்கிறேன். என்னை நடிகையாக பார்க்காமல், ஒரு பெண்ணாக பார்த்து நிம்மதியாக இருக்க விடுங்கள்” என்று தெரிவித்து இருக்கிறார்.
    Next Story
    ×