என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா
X
சாருஹாசன், ஜனகராஜ் இணையும் தாதா 87
Byமாலை மலர்18 April 2017 9:25 AM GMT (Updated: 18 April 2017 9:25 AM GMT)
சாருஹாசனும், ஜனகராஜும் இணைந்து ‘தாதா 87’ என்ற படத்தில் நடிக்கவிருக்கிறார்கள். இதுகுறித்த செய்தியை கீழே விரிவாக பார்ப்போம்.
80-களில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் தனது தனித்துவமான, எதார்த்தமான நடிப்பால் அனைவரையும் கவர்ந்தவர் சாருஹாசன். இவர் நடிகர் கமல்ஹாசனின் அண்ணனுமாவார். அதேபோல், 80, 90-களில் காமெடியில் மட்டுமில்லாது, குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் தனக்கென்று தனி முத்திரை பதித்தவர் ஜனகராஜ். சாருஹாசன் தமிழ் சினிமாவில் தற்போதும் சில படங்களில் சிறு கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். ஆனால், ஜனகராஜோ சினிமாவை விட்டு ஒதுங்கி இருக்கிறார்.
இந்நிலையில், சாருஹாசனும், ஜனகராஜும் இணைந்து புதிய படமொன்றில் இணையவிருக்கிறார்கள். இப்படத்திற்கு ‘தாதா 87’ என்ற பெயர் வைத்துள்ளனர். இப்படத்தில் சாருஹாசன் தாதாவாக நடிக்கிறாராம். ஜனகராஜ் ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரியாக வருகிறாராம். இவர்தான் படத்தின் கதாநாயகியின் தந்தையாவும் நடிக்கிறாராம்.
இப்படத்தை விஜய் ஸ்ரீ என்பவர் இயக்குகிறார். லியான்டர் லீ மார்ட்டி என்பவர் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுப்பாக நடைபெற்று வருகிறது. இதன் போஸ்டரை நேற்று நடிகை கேத்ரீன் தெரசா வெளியிட்டுள்ளார். இப்படத்திற்காக கமல்ஹாசன் ஒரு பாடல் பாடியுள்ளதாகவும் கூறப்படுகிறது. கலை சினிமா நிறுவனம் மூலம் கலைசெல்வன் மருதை என்பவர் இப்படத்தை தயாரிக்கிறார்.
இந்நிலையில், சாருஹாசனும், ஜனகராஜும் இணைந்து புதிய படமொன்றில் இணையவிருக்கிறார்கள். இப்படத்திற்கு ‘தாதா 87’ என்ற பெயர் வைத்துள்ளனர். இப்படத்தில் சாருஹாசன் தாதாவாக நடிக்கிறாராம். ஜனகராஜ் ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரியாக வருகிறாராம். இவர்தான் படத்தின் கதாநாயகியின் தந்தையாவும் நடிக்கிறாராம்.
இப்படத்தை விஜய் ஸ்ரீ என்பவர் இயக்குகிறார். லியான்டர் லீ மார்ட்டி என்பவர் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுப்பாக நடைபெற்று வருகிறது. இதன் போஸ்டரை நேற்று நடிகை கேத்ரீன் தெரசா வெளியிட்டுள்ளார். இப்படத்திற்காக கமல்ஹாசன் ஒரு பாடல் பாடியுள்ளதாகவும் கூறப்படுகிறது. கலை சினிமா நிறுவனம் மூலம் கலைசெல்வன் மருதை என்பவர் இப்படத்தை தயாரிக்கிறார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X