என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா
X
ஸ்கெட்ச் படத்தில் பாடல் பாடிய விக்ரம்
Byமாலை மலர்18 April 2017 5:30 AM GMT (Updated: 18 April 2017 5:30 AM GMT)
விஜய் சந்தர் இயக்கத்தில் உருவாகும் ‘ஸ்கெட்ச்’ படத்தில் விக்ரம் ஒரு பாடல் பாடியுள்ளதாக செய்தி வெளிவந்துள்ளது. இதுகுறித்த செய்தியை கீழே பார்ப்போம்.
‘இருமுகன்’ படத்தை தொடர்ந்து விக்ரம், விஜய் சந்தர் இயக்கத்தில் ‘ஸ்கெட்ச்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக தமன்னா நடித்து வருகிறார். மேலும், சூரி, ஆர்.கே.சுரேஷ், அருள்தாஸ், மலையாள நடிகர் ஹரீஷ், ஸ்ரீமன், விஸ்வாந்த் உள்ளிட்டோரும் நடித்து வருகின்றனர். பிரியங்காவும் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்.
இதுவரை வடசென்னையை பற்றி சொன்ன படங்களில் எல்லாமே அவர்கள் படிப்பறிவு இல்லாத பாமரர்கள், ஏழைகள் என்றுதான் கூறியிருக்கின்றன. ஆனால், இந்த படத்தில் வடசென்னையில் படித்த டாக்டர்கள், வக்கீல்கள் என்று உயர்மட்ட மக்களுக்கும் இருக்கிறார்கள் என்ற ஸ்டைலிஷ் ஆன படமாக உருவாக்கி வருகிறார்கள். இந்த படம் புதுமாதிரியான உணர்வை ஏற்படுத்தும் என படக்குழுவினர் நம்பிக்கை தெரிவிக்கின்றனர். இப்படத்திற்காக சென்னையில் பிரம்மாண்ட அரங்குகள் அமைத்து முப்பது நாட்களுக்கும் மேலாக படமாக்கியுள்ளனர்.
இந்நிலையில், இப்படத்தில் விக்ரம் ஒரு பாடலை பாடியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. தமன் இசையில் ‘கனவே கனவே புது கனவே, விழிக்கும்போது வரும் கனவே’ என்று தொடங்கும் இந்த பாடலை விஜய் சந்தரே எழுதியுள்ளார். இந்த பாடல் சமீபத்தில் பதிவு செய்யப்பட்டது. பாடல் மிகவும் நன்றாக வந்துள்ளதாக படக்குழுவினர் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.
இப்படத்தை வி.கிரியேஷன்ஸ் நிறுவனம் சார்பில் கலைப்புலி எஸ்.தாணு வழங்க, மூவிங் பிரேம் பட நிறுவனம் தயாரிக்கிறது. தற்போது இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இதுவரை வடசென்னையை பற்றி சொன்ன படங்களில் எல்லாமே அவர்கள் படிப்பறிவு இல்லாத பாமரர்கள், ஏழைகள் என்றுதான் கூறியிருக்கின்றன. ஆனால், இந்த படத்தில் வடசென்னையில் படித்த டாக்டர்கள், வக்கீல்கள் என்று உயர்மட்ட மக்களுக்கும் இருக்கிறார்கள் என்ற ஸ்டைலிஷ் ஆன படமாக உருவாக்கி வருகிறார்கள். இந்த படம் புதுமாதிரியான உணர்வை ஏற்படுத்தும் என படக்குழுவினர் நம்பிக்கை தெரிவிக்கின்றனர். இப்படத்திற்காக சென்னையில் பிரம்மாண்ட அரங்குகள் அமைத்து முப்பது நாட்களுக்கும் மேலாக படமாக்கியுள்ளனர்.
இந்நிலையில், இப்படத்தில் விக்ரம் ஒரு பாடலை பாடியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. தமன் இசையில் ‘கனவே கனவே புது கனவே, விழிக்கும்போது வரும் கனவே’ என்று தொடங்கும் இந்த பாடலை விஜய் சந்தரே எழுதியுள்ளார். இந்த பாடல் சமீபத்தில் பதிவு செய்யப்பட்டது. பாடல் மிகவும் நன்றாக வந்துள்ளதாக படக்குழுவினர் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.
இப்படத்தை வி.கிரியேஷன்ஸ் நிறுவனம் சார்பில் கலைப்புலி எஸ்.தாணு வழங்க, மூவிங் பிரேம் பட நிறுவனம் தயாரிக்கிறது. தற்போது இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X