என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா
X
விஜய்யுடன் இணைந்து நடிக்க கண்டிஷன் போடும் மகேஷ் பாபு
Byமாலை மலர்15 April 2017 12:46 PM GMT (Updated: 15 April 2017 12:46 PM GMT)
விஜய்யுடன் இணைந்து நடிக்க தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு சில நிபந்தணைகளை விதித்துள்ளார். அது என்னென்ன நிபந்தனைகள் என்பதை கீழே பார்ப்போம்.
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மகேஷ் பாபு - ரகுல் ப்ரீத் சிங் இணைந்து நடித்து வரும் படம் `ஸ்பைடர்'. இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில், ரம்ஜானை முன்னிட்டு வருகிற ஜுன் 23-ஆம் தேதி ரிலீசாக உள்ளது.
மேலும் இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா, பரத், ஆர்ஜே.பாலாஜி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். சமீபத்தில் மகேஷ் பாபுவுடனான சந்திப்பின் போது, விஜய்யுடன் நடிப்பது உள்ளிட்ட பல கேள்விகளுக்கு அவர் மனம் திறந்துள்ளார். சென்னையில் பிறந்து, வளர்ந்த மகேஷ் பாபு இங்குள்ள பிரபல தனியார் கல்லூரியில் படித்தவர். படித்து முடித்த பிறகு மணிரத்னம் இயக்கத்தில் `பொன்னியின் செல்வன்' என்ற படத்தில் விஜய்யுடன் இணைந்து மகேஷ் பாபு நடிக்கவிருந்தார். ஆனால் இப்படத்திற்கான திரைக்கதை அமைக்க முடியாமல் போனது, உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இப்படம் தொடங்காமலேயே ரத்து செய்யப்பட்டது.
எனவே, விஜய்யுடன் நடிக்க மீண்டும் ஒரு வாய்ப்பு வந்தால் நடிப்பீர்களா என்று மகேஷ் பாபுவிடம் கேட்டதற்கு மகேஷ் அளித்த பதிலாவது,
விஜய்யுடன் நடிப்பதில் எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால் ஒரு சில நிபந்தணைகள் உண்டு என்று கூறியுள்ளார். அந்த நிபந்தணைகளாவது, எனக்கும், விஜய்க்கும் சமமான கதாபாத்திரம் அமைய வேண்டும். அந்த கதையை திரையுலகின் திறமையான இயக்குநர் இயக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். இவ்வாறு இருவருக்கும் முக்கியத்துவம் அளிக்கும் வகையில் படம் இயக்க ஏ.ஆர்.முருகதாஸால் முடியும் என்று தான் நினைப்பதாகவும் அவர் கூறியுள்ளார். அவ்வாறு ஒரு நல்ல கதையும், கதாபாத்திரமும் அமைந்தால் விஜய்யுடன் இணைந்து நடிக்க தான் தயாராக இருப்பதாகவும் கூறியுள்ளார்.
மேலும் இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா, பரத், ஆர்ஜே.பாலாஜி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். சமீபத்தில் மகேஷ் பாபுவுடனான சந்திப்பின் போது, விஜய்யுடன் நடிப்பது உள்ளிட்ட பல கேள்விகளுக்கு அவர் மனம் திறந்துள்ளார். சென்னையில் பிறந்து, வளர்ந்த மகேஷ் பாபு இங்குள்ள பிரபல தனியார் கல்லூரியில் படித்தவர். படித்து முடித்த பிறகு மணிரத்னம் இயக்கத்தில் `பொன்னியின் செல்வன்' என்ற படத்தில் விஜய்யுடன் இணைந்து மகேஷ் பாபு நடிக்கவிருந்தார். ஆனால் இப்படத்திற்கான திரைக்கதை அமைக்க முடியாமல் போனது, உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இப்படம் தொடங்காமலேயே ரத்து செய்யப்பட்டது.
எனவே, விஜய்யுடன் நடிக்க மீண்டும் ஒரு வாய்ப்பு வந்தால் நடிப்பீர்களா என்று மகேஷ் பாபுவிடம் கேட்டதற்கு மகேஷ் அளித்த பதிலாவது,
விஜய்யுடன் நடிப்பதில் எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால் ஒரு சில நிபந்தணைகள் உண்டு என்று கூறியுள்ளார். அந்த நிபந்தணைகளாவது, எனக்கும், விஜய்க்கும் சமமான கதாபாத்திரம் அமைய வேண்டும். அந்த கதையை திரையுலகின் திறமையான இயக்குநர் இயக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். இவ்வாறு இருவருக்கும் முக்கியத்துவம் அளிக்கும் வகையில் படம் இயக்க ஏ.ஆர்.முருகதாஸால் முடியும் என்று தான் நினைப்பதாகவும் அவர் கூறியுள்ளார். அவ்வாறு ஒரு நல்ல கதையும், கதாபாத்திரமும் அமைந்தால் விஜய்யுடன் இணைந்து நடிக்க தான் தயாராக இருப்பதாகவும் கூறியுள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X