என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா
X
இந்தி பட உலகை நம்பி நான் இல்லை: கமல் பட நாயகி அதிரடி
Byமாலை மலர்12 April 2017 8:21 AM GMT (Updated: 12 April 2017 8:21 AM GMT)
இந்த பட உலகை நம்பி நான் இல்லை என்று கமல் பட நாயகி அதிரடியாக அறிவித்துள்ளார். இதுகுறித்த செய்தியை கீழே விரிவாக பார்ப்போம்.
இந்தி படஉலகில் முன்னணி நடிகையாக வலம்வந்தவர் ரவீணா தண்டன். இவர் தமிழில் கமல் நடிப்பில் வெளிவந்த ‘ஆளவந்தான்’ படத்திலும் நடித்துள்ளார். சில ஆண்டுகளாக சினிமாவில் நடிக்காமல் ஒதுங்கிஇருந்த ரவீணா, ‘மாத்தர்’ என்ற படத்தின் மூலம் மீண்டும் இந்தி படங்களில் நடிக்கத் தொடங்கி இருக்கிறார். இந்த படத்தை பிரபலப்படுத்துவதில் தீவிரமாக இருக்கிறார்.
இந்நிலையில் படங்களில் நடிப்பது பற்றி கூறிய ரவீணா தண்டன், “இந்தி பட உலகை மட்டும் நம்பி என் வாழ்க்கை இல்லை. எனது வாழ்க்கையின் ஒரு பகுதிதான் இந்த பட உலகம். எனக்கென்று கணவர், குழந்தைகள், குடும்பம் என்று சில கடமைகள் இருக்கின்றன. இன்னும் நிறைய விஷயங்கள் செய்ய வேண்டும் என்ற ஆசை இருக்கிறது.
நான் இந்தி படங்களில் மட்டும்தான் நடிக்க வேண்டும் என்று கட்டாயம் இல்லை. ஒவ்வொரு வாரமும் என் பெயர் வரவேண்டும் என்று எண்ணி படங்களில் நடிக்க ஆசைப்படவில்லை” என்று தெரிவித்து இருக்கிறார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X