என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா
X
சமுதாய உணர்வை புண்படுத்தியதாக வழக்கு: ராக்கி சாவந்த் தலைமறைவு
Byமாலை மலர்5 April 2017 5:15 AM GMT (Updated: 5 April 2017 5:15 AM GMT)
சமுதாய உணர்வை புண்படுத்தியதாக தொடரப்பட்ட வழக்கில் போலீசார் மும்பையில் தேடிய போது இந்தி நடிகை ராக்கி சாவந்த் தலை மறைவானார். இது குறித்த விரிவான செய்தியை பார்க்கலாம்.
பிரபல கவர்ச்சி நடிகை ராக்கி சாவந்த் கடந்த ஆண்டு தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்ற போது, ராமாயணத்தை இயற்றிய வால்மீகி முனிவர் குறித்து ஆட்சேபனைக்குரிய கருத்து தெரிவித்தார்.
இதன் காரணமாக சமுதாய உணர்வை புண்படுத்தியதாக கூறி, அவர் மீது பஞ்சாப் மாநிலம் லூதியானா கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கு விசாரணையின் போது, நேரில் ஆஜராகுமாறு ராக்கி சாவந்துக்கு பல முறை கோர்ட்டு உத்தரவிட்டும் அவர் ஆஜராகவில்லை.
இதைத்தொடர்ந்து, அவருக்கு எதிராக கைது வாரண்டு பிறப்பிக்கப்பட்டது. அதன்படி, ராக்கி சாவந்தை கைது செய்வதற்காக இரண்டு போலீசார் லூதியானாவில் இருந்து மும்பை வந்தனர். மும்பையில் அவரது வீட்டில் அவரை காணவில்லை. அவர் தலை மறைவானது தெரியவந்தது.
இதனால், ராக்கி சாவந்தை கைது செய்யும் போலீசாரின் முயற்சி தோல்வியில் முடிந்தது. இதுபற்றி கோர்ட்டில் தெரியப்படுத்துவோம் என்று லூதியானா துணை போலீஸ் கமிஷனர் கூறினார்.
ராக்கி சாவந்த் மீதான வழக்கு வருகிற 10-ந் தேதி மீண்டும் விசாரணைக்கு வர இருப்பது குறிப்பிடத்தக்கது.
இதன் காரணமாக சமுதாய உணர்வை புண்படுத்தியதாக கூறி, அவர் மீது பஞ்சாப் மாநிலம் லூதியானா கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கு விசாரணையின் போது, நேரில் ஆஜராகுமாறு ராக்கி சாவந்துக்கு பல முறை கோர்ட்டு உத்தரவிட்டும் அவர் ஆஜராகவில்லை.
இதைத்தொடர்ந்து, அவருக்கு எதிராக கைது வாரண்டு பிறப்பிக்கப்பட்டது. அதன்படி, ராக்கி சாவந்தை கைது செய்வதற்காக இரண்டு போலீசார் லூதியானாவில் இருந்து மும்பை வந்தனர். மும்பையில் அவரது வீட்டில் அவரை காணவில்லை. அவர் தலை மறைவானது தெரியவந்தது.
இதனால், ராக்கி சாவந்தை கைது செய்யும் போலீசாரின் முயற்சி தோல்வியில் முடிந்தது. இதுபற்றி கோர்ட்டில் தெரியப்படுத்துவோம் என்று லூதியானா துணை போலீஸ் கமிஷனர் கூறினார்.
ராக்கி சாவந்த் மீதான வழக்கு வருகிற 10-ந் தேதி மீண்டும் விசாரணைக்கு வர இருப்பது குறிப்பிடத்தக்கது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X