என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா
X
மோடியின் திட்டத்தை பின்பற்றி உருவாகும் ரஜினியின் 2.0
Byமாலை மலர்5 April 2017 3:32 AM GMT (Updated: 5 April 2017 3:32 AM GMT)
ரஜினிகாந்த் நடிப்பில் ‘எந்திரன்’ இரண்டாம் பாகமாக தயாராகிக் கொண்டிருக்கும் ‘2.0’ ரூ.350 கோடி செலவில் ‘மேக் இன் இந்தியா’ படமாக உருவாகிறது.
இந்தியாவில் பெரும் பொருள் செலவில் தயாரிக்கப்படும் படங்களில் பொதுவாக வெளிநாட்டு வாடை அதிகமாக இருக்கும். அதாவது, பல நாடுகளில் படப்பிடிப்பு நடைபெறுவதுடன், வெளிநாட்டு நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் அதிகமாக பயன்படுத்தப்படுவார்கள். குறிப்பாக வி.எப்.எக்ஸ். எனப்படும் தந்திரக் காட்சிகளில் ஹாலிவுட் தொழில்நுட்பங்களை உபயோகிப்பது வழக்கமாக இருந்து வருகிறது.
ஆனால் ரஜினியின் எந்திரன் இரண்டாம் பாகம் (2.0) இந்த விதிக்கு முரணாக தயாரிக்கப்பட்டு வருகிறது. ஷங்கர் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் இந்தப் படம் முழுக்க முழுக்க இந்தியாவிலேயே படமாக்கப்பட்டு இருக்கிறது. மேலும் இந்தப் படத்தில் பங்கேற்றுள்ள தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவருமே இந்தியர்கள். வி.எப்.எக்ஸ். தொழில்நுட்பங்களுக்கும் உள்நாட்டு நிபுணர்கள்தான் பயன்படுத்தப்பட்டுள்ளனர்.
இந்திய திரையுலகம் இதுவரை கண்டிராத மெகா பட்ஜெட்டில் தயாராகி வரும் 2.0 அக்டோபர் மாதத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜப்பானிய, கொரிய மொழிகள் உள்பட மொத்தம் 7 மொழிகளில் ரூ.350 கோடி செலவில் உருவாகும் இந்தப் படம் உண்மையிலேயே ‘மேக் இன் இந்தியா’ அம்சம் கொண்டது என இப்படத்துடன் தொடர்பு உள்ளவர்கள் தெரிவித்தனர்.
கதாநாயகனாக ரஜினியும், வில்லனாக அக்ஷய் குமாரும் தோன்றும் 2.0 படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசை அமைக்கிறார். நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய, வி.எப்.எக்ஸ். தொழில்நுட்பங்களை ‘பாகுபலி’ புகழ் ஸ்ரீநிவாஸ் மோகன் வழங்குகிறார். ‘ஸ்லம்டாக் மில்லினர்’ படத்தில் ஒலித்தொகுப்பாளராக பணியாற்றி ஆஸ்கார் விருது பெற்ற ரசூல் பூக்குட்டியும் படக்குழுவில் இருக்கிறார்.
ஆனால் ரஜினியின் எந்திரன் இரண்டாம் பாகம் (2.0) இந்த விதிக்கு முரணாக தயாரிக்கப்பட்டு வருகிறது. ஷங்கர் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் இந்தப் படம் முழுக்க முழுக்க இந்தியாவிலேயே படமாக்கப்பட்டு இருக்கிறது. மேலும் இந்தப் படத்தில் பங்கேற்றுள்ள தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவருமே இந்தியர்கள். வி.எப்.எக்ஸ். தொழில்நுட்பங்களுக்கும் உள்நாட்டு நிபுணர்கள்தான் பயன்படுத்தப்பட்டுள்ளனர்.
இந்திய திரையுலகம் இதுவரை கண்டிராத மெகா பட்ஜெட்டில் தயாராகி வரும் 2.0 அக்டோபர் மாதத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜப்பானிய, கொரிய மொழிகள் உள்பட மொத்தம் 7 மொழிகளில் ரூ.350 கோடி செலவில் உருவாகும் இந்தப் படம் உண்மையிலேயே ‘மேக் இன் இந்தியா’ அம்சம் கொண்டது என இப்படத்துடன் தொடர்பு உள்ளவர்கள் தெரிவித்தனர்.
கதாநாயகனாக ரஜினியும், வில்லனாக அக்ஷய் குமாரும் தோன்றும் 2.0 படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசை அமைக்கிறார். நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய, வி.எப்.எக்ஸ். தொழில்நுட்பங்களை ‘பாகுபலி’ புகழ் ஸ்ரீநிவாஸ் மோகன் வழங்குகிறார். ‘ஸ்லம்டாக் மில்லினர்’ படத்தில் ஒலித்தொகுப்பாளராக பணியாற்றி ஆஸ்கார் விருது பெற்ற ரசூல் பூக்குட்டியும் படக்குழுவில் இருக்கிறார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X