என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா
X
2.ஓ படப்பிடிப்பில் அடிதடி: இயக்குனர் ஷங்கரின் உறவினரிடம் போலீசார் விசாரணை
Byமாலை மலர்22 March 2017 9:14 AM GMT (Updated: 22 March 2017 9:14 AM GMT)
ரஜினியின் 2.ஓ படப்பிடிப்பில் அடிதடி ஏற்பட்டதால் இயக்குனர் ஷங்கருடைய உறவினரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இதுகுறித்த செய்தியை கீழே விரிவாக பார்ப்போம்.
ரஜினி நடிப்பில் உருவாகிவரும் ‘2.ஓ’ படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதிக்கட்டத்தை நெருங்கி வருகிறது. இறுதிக்கட்ட படப்பிடிப்பை தற்போது சென்னையில் இயக்குனர் ஷங்கர் படமாக்கி வருகிறார். ரஜினி சம்பந்தப்பட்ட காட்சிகள் முடிவடைந்துவிட்டதால், மற்ற நடிகர்களுக்குண்டான பகுதிகளை இயக்குனர் படமாக்கி வருகிறார்.
இந்நிலையில், சென்னை திருவல்லிக்கேணி பகுதியில் ‘2.ஓ’ படப்பிடிப்பு பலத்த பாதுகாப்புடன் நடைபெற்று வந்தது. படப்பிடிப்பு தளத்தை படம்பிடிப்பதற்காக பிரபல நாளிதழை சேர்ந்த புகைப்பட கலைஞர்கள் அதை படம்பிடிப்பதற்காக அங்கு சென்றுள்ளனர். அப்போது, பாதுகாவலர்கள் அவர்களை உள்ளே விட மறுத்துள்ளனர்.
தங்களை அனுமதிக்கவேண்டும் என்று பாதுகாவலர்களிடம் புகைப்பட கலைஞர்கள் வாக்குவாதம் செய்ய, அது கடைசியில் கைகலப்பில் முடிந்துள்ளது. இதில், புகைப்பட கலைஞர்களில் ஒருவருக்கு பலத்த காயம் அடைந்தார். இதையடுத்து, அவர் ஐஸ் அவுஸ் காவல் நிலையத்தில் சம்பந்தப்பட்டவர்கள் மீது புகார் அளித்துள்ளனர்.
அவர்கள் அளித்த புகாரின் அடிப்படையில், ஐஸ் அவுஸ் போலீசார் இயக்குனர் ஷங்கரின் அக்கா பையனும், உதவி இயக்குனருமான பப்புவை விசாரணைக்காக போலீஸ் நிலையம் அழைத்து சென்றுள்ளனர். இதனால், ‘2.ஓ’ படப்பிடிப்பில் சற்று பரபரப்பு ஏற்பட்டது.
இந்நிலையில், சென்னை திருவல்லிக்கேணி பகுதியில் ‘2.ஓ’ படப்பிடிப்பு பலத்த பாதுகாப்புடன் நடைபெற்று வந்தது. படப்பிடிப்பு தளத்தை படம்பிடிப்பதற்காக பிரபல நாளிதழை சேர்ந்த புகைப்பட கலைஞர்கள் அதை படம்பிடிப்பதற்காக அங்கு சென்றுள்ளனர். அப்போது, பாதுகாவலர்கள் அவர்களை உள்ளே விட மறுத்துள்ளனர்.
தங்களை அனுமதிக்கவேண்டும் என்று பாதுகாவலர்களிடம் புகைப்பட கலைஞர்கள் வாக்குவாதம் செய்ய, அது கடைசியில் கைகலப்பில் முடிந்துள்ளது. இதில், புகைப்பட கலைஞர்களில் ஒருவருக்கு பலத்த காயம் அடைந்தார். இதையடுத்து, அவர் ஐஸ் அவுஸ் காவல் நிலையத்தில் சம்பந்தப்பட்டவர்கள் மீது புகார் அளித்துள்ளனர்.
அவர்கள் அளித்த புகாரின் அடிப்படையில், ஐஸ் அவுஸ் போலீசார் இயக்குனர் ஷங்கரின் அக்கா பையனும், உதவி இயக்குனருமான பப்புவை விசாரணைக்காக போலீஸ் நிலையம் அழைத்து சென்றுள்ளனர். இதனால், ‘2.ஓ’ படப்பிடிப்பில் சற்று பரபரப்பு ஏற்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X