என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா
X
25 வருடங்களுக்கு பிறகு ரஜினியுடன் மீண்டும் இணையும் நடிகை
Byமாலை மலர்20 March 2017 3:39 AM GMT (Updated: 20 March 2017 3:39 AM GMT)
90-களில் ரஜினிக்கு ஜோடியாக நடித்த முன்னணி நடிகை, 25 வருடங்களுக்கு பிறகு ரஜினியுடன் மீண்டும் இணைந்து நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. அந்த நடிகை யார்? என்பதை கீழே பார்ப்போம்.
பிராம்மாண்ட இயக்குநர் ஷங்கரின் `2.0' படத்தில் பிசியாக நடித்துக் கொண்டு இருக்கும் ரஜினி அடுத்ததாக பா.ரஞ்சித் இயக்கத்தில் மீண்டும் நடிக்க உள்ளார். `கபாலி' படத்தின் வெற்றிக்கு பிறகு சூப்பர்ஸ்டார் ரஜினி - பா.ரஞ்ஜித் இணையும் பெயரிடப்படாத படத்தை ரஜினியின் மருமகனும், நடிகருமான தனுஷ் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான வுண்டர்பார் பிலிம்ஸ் தலைப்பில் தயாரிக்க உள்ளார்.
இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக அவருடன் `கோச்சடையான்' படத்தில் நடித்த தீபிகா படுகோனே நடிக்க உள்ளதாக செய்திகள் வெளியாகின. அதனை மறுத்த இயக்குநர் ரஞ்சித், மாறாக படத்திற்கான நாயகி குறித்த தேர்வு நடைபெற்று வருவதாக தெரிவித்திருந்தார்.
2010-ஆம் ஆண்டுக்கு பிறகு ரஜினி நடிப்பில் வெளிவந்த பெரும்பாலான படங்களில் அவருக்கு ஜோடியாக பாலிவுட் நடிகைகளே நடித்திருந்தனர். இந்நிலையில், 90-களில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்த குஷ்பு, 25 வருடங்களுக்கு பிறகு ரஜினியுடன் மீண்டும் இணைந்து நடிக்க உள்ளார். இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் குஷ்பு நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
இதற்கு முன்பாக ரஜினி - குஷ்பு கூட்டணி இணைந்து `அண்ணாமலை', `மன்னன்', `பாண்டியன்', `நாட்டுக்கு ஒரு நல்லவன்' உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
புதியதாக தொடங்க உள்ள இப்படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் மாதம் இரண்டாவது பாதியில் ஆரம்பமாகிறது.
இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக அவருடன் `கோச்சடையான்' படத்தில் நடித்த தீபிகா படுகோனே நடிக்க உள்ளதாக செய்திகள் வெளியாகின. அதனை மறுத்த இயக்குநர் ரஞ்சித், மாறாக படத்திற்கான நாயகி குறித்த தேர்வு நடைபெற்று வருவதாக தெரிவித்திருந்தார்.
2010-ஆம் ஆண்டுக்கு பிறகு ரஜினி நடிப்பில் வெளிவந்த பெரும்பாலான படங்களில் அவருக்கு ஜோடியாக பாலிவுட் நடிகைகளே நடித்திருந்தனர். இந்நிலையில், 90-களில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்த குஷ்பு, 25 வருடங்களுக்கு பிறகு ரஜினியுடன் மீண்டும் இணைந்து நடிக்க உள்ளார். இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் குஷ்பு நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
இதற்கு முன்பாக ரஜினி - குஷ்பு கூட்டணி இணைந்து `அண்ணாமலை', `மன்னன்', `பாண்டியன்', `நாட்டுக்கு ஒரு நல்லவன்' உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
புதியதாக தொடங்க உள்ள இப்படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் மாதம் இரண்டாவது பாதியில் ஆரம்பமாகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X