என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா
நல்ல படக்குழு இல்லாமல் ஹீரோ தனியாக திறமையை காட்டமுடியாது: ஜெயம் ரவி
ஜெயம் ரவி தற்போது பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார். நாயகர்கள் தங்கள் திறமையை காட்ட என்ன வேண்டும் என்பது குறித்து கூறிய ஜெயம்ரவி,
“சில இயக்குனர்கள் நன்றாக கதை சொல்லுவார்கள். ஆனால் சொன்னதுபோல அவர்களால் படம் எடுக்க முடியாது. அதற்கு பல காரணங்கள் உண்டு. முக்கியமாக படக்குழு நன்றாக அமைய வேண்டும். தொழில் நுட்ப கலைஞர்கள் சரியாக அமையவில்லை என்றால், அந்த படம் சரியாக வராது. அந்த படத்துக்காக உழைத்த அனைவருக்கும் பலன் கிடைக்காமல் போய்விடும்.
எனவே, நான் கதையை கேட்டு ஒப்புக் கொண்டாலும், அதன் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்பதை கவனிப்பேன். அதில் எனக்கு திருப்தியாக இருந்தால் மட்டுமே அந்த படத்தில் நடிப்பேன். இல்லையென்றால் தவிர்த்து விடுவேன். ஏனென்றால் ஒரு ஹீரோவாக நான் திறமையை காட்ட வேண்டும் என்றால், நல்ல கதையுடன் நன்றாக பணியுரியும் படக்குழுவும் வேண்டும். தொழில் நுட்ப குழு அவரவர் வேலையை சரியாக செய்தால் தான் ஹீரோவின் திறமை, உழைப்பு வெளிப்படும். இல்லையென்றால் எவ்வளவு கடினமாக உழைத்தாலும் எல்லாமே வீணாகிவிடும்” என்றார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்