என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா
X
கோலாப்பூரில் தீபிகா படுகோனே படப்பிடிப்பு தளம் சூறை
Byமாலை மலர்16 March 2017 3:51 AM GMT (Updated: 16 March 2017 3:51 AM GMT)
கோலாப்பூரில் நடிகை தீபிகா படுகோனே நடித்து வரும் புதிய படத்தின் படப்பிடிப்பு தளம் தீ வைத்து சூறையாடப்பட்டது. இது குறித்த விரிவான செய்தியை பார்க்கலாம்.
பிரபல இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் நடிகை தீபிகா படுகோனே, நடிகர்கள் ரன்வீர் சிங், ஷாகித் கபூர், விவேக் ஓபராய் உள்ளிட்டவர்கள் நடிப்பில் ‘பத்மாவதி’ என்ற பெயரில் ஒரு இந்திப்படம் எடுக்கப்படுகிறது. இது ஒரு வரலாற்றுப்படம். இதில் நடிகை தீபிகா படுகோனே ராணி பத்மினியாக நடிக்கிறார்.
இந்த படத்துக்காக கோலாப்பூர் மாவட்டம் மசாய் பத்தார் என்ற இடத்தில் தளம் அமைக்கப்பட்டு படப்பிடிப்பு நடந்து வருகிறது. இந்த நிலையில் நேற்று அதிகாலை 1 மணிக்கு அந்த படப்பிடிப்பு தளத்திற்குள், அடையாளம் தெரியாத 15 முதல் 20 பேர் நுழைந்து சூறையாடினர். அத்துடன் நடிகர், நடிகைகளின் உடைகளையும், குதிரைகளுக்கு வைக்கப்பட்டிருந்த தீவனத்தையும் தீயிட்டுக்கொளுத்தினர்.
கோலாப்பூரில் படப்பிடிப்பு தளம் தீவைத்து சூறையாடப்பட்டு கிடப்பதை படத்தில் காணலாம்.
அவர்களில் 2 பேரை படப்பிடிப்பு குழுவினர் பிடித்தனர். ஆனால் அந்த கும்பலை சேர்ந்தவர்கள், படப்பிடிப்பு குழுவினரை தாக்கி அவர்களை தப்ப வைத்தனர். படப்பிடிப்பு குழுவினரின் வாகனங்களுக்கும் அந்த கும்பல் தீ வைக்க முயற்சித்ததாக கூறப்படுகிறது. சம்பவத்தை தொடர்ந்து அந்த கும்பலினர் தப்பிவிட்டனர். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
தகவல் அறிந்த கோலாப்பூர் சரக ஐ.ஜி. மற்றும் போலீஸ் சூப்பிரண்டு உள்ளிட்ட அதிகாரிகள் படப்பிடிப்பு தளத்துக்கு சென்று சஞ்சய் லீலா பன்சாலியை சந்தித்து பேசினர்.
இதனிடையே, சட்டசபை வளாகத்தில் நிருபர்களிடம் பேசிய மந்திரி தீபக் கேசர்கர், “இந்த சம்பவம் குறித்து போலீசில் புகார் அளிக்குமாறு திரைப்பட தயாரிப்பாளர்களிடம் கூறியிருக்கிறோம். போலீசார் வழக்குப்பதிவு செய்ததும், இந்த சம்பவம் குறித்து உள்துறை விசாரணைக்கு உத்தரவிடும்” என்றார்.
இந்த படத்துக்காக கோலாப்பூர் மாவட்டம் மசாய் பத்தார் என்ற இடத்தில் தளம் அமைக்கப்பட்டு படப்பிடிப்பு நடந்து வருகிறது. இந்த நிலையில் நேற்று அதிகாலை 1 மணிக்கு அந்த படப்பிடிப்பு தளத்திற்குள், அடையாளம் தெரியாத 15 முதல் 20 பேர் நுழைந்து சூறையாடினர். அத்துடன் நடிகர், நடிகைகளின் உடைகளையும், குதிரைகளுக்கு வைக்கப்பட்டிருந்த தீவனத்தையும் தீயிட்டுக்கொளுத்தினர்.
கோலாப்பூரில் படப்பிடிப்பு தளம் தீவைத்து சூறையாடப்பட்டு கிடப்பதை படத்தில் காணலாம்.
அவர்களில் 2 பேரை படப்பிடிப்பு குழுவினர் பிடித்தனர். ஆனால் அந்த கும்பலை சேர்ந்தவர்கள், படப்பிடிப்பு குழுவினரை தாக்கி அவர்களை தப்ப வைத்தனர். படப்பிடிப்பு குழுவினரின் வாகனங்களுக்கும் அந்த கும்பல் தீ வைக்க முயற்சித்ததாக கூறப்படுகிறது. சம்பவத்தை தொடர்ந்து அந்த கும்பலினர் தப்பிவிட்டனர். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
தகவல் அறிந்த கோலாப்பூர் சரக ஐ.ஜி. மற்றும் போலீஸ் சூப்பிரண்டு உள்ளிட்ட அதிகாரிகள் படப்பிடிப்பு தளத்துக்கு சென்று சஞ்சய் லீலா பன்சாலியை சந்தித்து பேசினர்.
இதனிடையே, சட்டசபை வளாகத்தில் நிருபர்களிடம் பேசிய மந்திரி தீபக் கேசர்கர், “இந்த சம்பவம் குறித்து போலீசில் புகார் அளிக்குமாறு திரைப்பட தயாரிப்பாளர்களிடம் கூறியிருக்கிறோம். போலீசார் வழக்குப்பதிவு செய்ததும், இந்த சம்பவம் குறித்து உள்துறை விசாரணைக்கு உத்தரவிடும்” என்றார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X