என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா
X
அஜித்துக்கு முகவரி கொடுத்த இயக்குனருக்கு கைகொடுத்த சமுத்திரகனி
Byமாலை மலர்15 March 2017 7:39 AM GMT (Updated: 15 March 2017 7:39 AM GMT)
அஜித்தை வைத்து முகவரி என்ற படத்தை கொடுத்த இயக்குனர் அடுத்ததாக சமுத்திரகனியை வைத்து படம் எடுக்கவிருக்கிறார். அதுகுறித்த செய்தியை கீழே விரிவாக பார்ப்போம்.
அஜித் நடிப்பில் வெளிவந்த ’முகவரி’ படத்தை இயக்கியவர் வி.இசட்.துரை. இப்படத்திற்கு பிறகு சிம்புவை வைத்து ‘தொட்டி ஜெயா’, பரத்தை வைத்து ‘நேபாளி’, ஷாமை வைத்து ‘6 மெழுகுவர்த்திகள்’ ஆகிய படங்களை இயக்கினார். ஆனால், இந்த படங்கள் எல்லாம் பெரிதளவில் பேசப்பட்டாலும், வி.இசட்.துரைக்கு அடுத்தடுத்து தமிழ் சினிமாவில் வாய்ப்புகளை வாரி வழங்கவில்லை.
இந்நிலையில், 4 ஆண்டு இடைவெளிக்கு பிறகு சமுத்திரகனியின் மூலம் வி.இசட்.துரைக்கு தமிழ் சினிமாவில் மறுபிரவேசம் கிடைத்துள்ளது. வி.இசட்.துரை அடுத்ததாக சமுத்திரகனி நடிப்பில் உருவாகவிருக்கும் ஒரு படத்தை இயக்கவுள்ளார். இப்படத்திற்கு ‘ஏமாளி’ என்று தலைப்பு வைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இப்படத்தில் இரண்டு கதாநாயகிகள் நடிக்கப்போவதாக கூறப்படுகிறது. நிறைய பேரை சுற்றி நடக்கும் கதையாக இது உருவாகவிருக்கிறது. ஜெயமோகன் இப்படத்திற்கு வசனங்களை எழுதவுள்ளார். நிதிஷ்-பிரகாஷ் என இரண்டு ஒளிப்பதிவாளர்கள் இப்படத்தில் பணியாற்றவிருக்கிறார்கள். சுதர்சன் படத்திற்கு எடிட்டிங்கை செய்யவிருக்கிறார். துபாயை சேர்ந்த இசையமைப்பாளர் ஒருவர் இப்படத்திற்கு இசைமைக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், 4 ஆண்டு இடைவெளிக்கு பிறகு சமுத்திரகனியின் மூலம் வி.இசட்.துரைக்கு தமிழ் சினிமாவில் மறுபிரவேசம் கிடைத்துள்ளது. வி.இசட்.துரை அடுத்ததாக சமுத்திரகனி நடிப்பில் உருவாகவிருக்கும் ஒரு படத்தை இயக்கவுள்ளார். இப்படத்திற்கு ‘ஏமாளி’ என்று தலைப்பு வைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இப்படத்தில் இரண்டு கதாநாயகிகள் நடிக்கப்போவதாக கூறப்படுகிறது. நிறைய பேரை சுற்றி நடக்கும் கதையாக இது உருவாகவிருக்கிறது. ஜெயமோகன் இப்படத்திற்கு வசனங்களை எழுதவுள்ளார். நிதிஷ்-பிரகாஷ் என இரண்டு ஒளிப்பதிவாளர்கள் இப்படத்தில் பணியாற்றவிருக்கிறார்கள். சுதர்சன் படத்திற்கு எடிட்டிங்கை செய்யவிருக்கிறார். துபாயை சேர்ந்த இசையமைப்பாளர் ஒருவர் இப்படத்திற்கு இசைமைக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X