என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா
X
திருமணத்துக்கு எல்லோரையும் அழைப்பேன்: பாவனா பேட்டி
Byமாலை மலர்15 March 2017 4:56 AM GMT (Updated: 15 March 2017 4:57 AM GMT)
நிச்சயதார்த்தம் ரகசியமாக நடந்து விட்டது. திருமணத்துக்கு எல்லோரையும் அழைப்பேன் என்று நடிகை பாவனா கூறினார். இது குறித்து அவர் அளித்த பேட்டியை பார்க்கலாம்.
நடிகை பாவனாவுக்கும், கன்னட தயாரிப்பாளர் நவீனுக்கும் கடந்த வாரம் கேரள மாநிலத்தில் உள்ள திருச்சூரில் திடீர் நிச்சயதார்த்தம் நடந்தது. பாவனா வீட்டில் இந்த நிச்சயதார்த்த நிகழ்ச்சியை நெருங்கிய உறவினர்களை மட்டும் வைத்து ரகசியமாக நடத்தினார்கள். திரையுலகில் இருந்து நடிகை மஞ்சு வாரியர் மட்டும் கலந்து கொண்டார்.
நிச்சயதார்த்தத்தில் கலந்துகொண்ட ஒருவர் அந்த படங்களை இணையதளத்தில் கசியவிட்ட பிறகே வெளி உலகத்துக்கு தெரியவந்தது. பாவனாவும், நவீனும் பல வருடங்களாக காதலித்து வந்தனர். கடந்த வருடம் இருவரும் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டனர். ஆனால் பாவனா தந்தையும், நவீன் தாயும் அடுத்தடுத்து மரணம் அடைந்ததால் திருமணத்தை தள்ளி வைத்தனர்.
இந்த நிலையில்தான் கொச்சியில் மலையாள படப்பிடிப்பை முடித்து விட்டு திரும்பிய பாவனா காரில் கடத்தப்பட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இது பட உலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பாவனா புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதனால் பாவனா திருமணம் நடக்குமா என்பது கேள்விக்குறியானது. இந்த நிலையில்தான் திருமண நிச்சயதார்த்தம் திடீரென்று நடந்து முடிந்துள்ளது. நிச்சயதார்த்தம் அவரசமாக நடந்தது ஏன்? என்பது குறித்து பாவனா அளித்த பேட்டி வருமாறு:-
“நானும், நவீனும் நீண்ட காலமாக பழகி திருமணம் செய்து கொள்ளும் முடிவில் இருந்தோம். நவீன் குடும்பத்தினர் சம்பிரதாயத்துக்காக என்னை பெண் பார்ப்பதற்காக வீட்டுக்கு வந்தனர். இருவீட்டாரும் திருமணம் பற்றி கலந்து பேசிக்கொண்டு இருந்தார்கள். இப்போதே மோதிரம் மாற்றிக்கொள்ளலாமே என்ற யோசனை கிளம்பியதால் அவசரமாக நிச்சயதார்த்தம் முடிந்து விட்டது.
நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு கூட தெரியப்படுத்த முடியவில்லை. எனக்கு திருமணம் நடப்பது வரை நிச்சயதார்த்தம் நடந்ததை வெளியில் சொல்ல வேண்டாம் என்று நினைத்தேன். ஆனால் நிச்சயதார்த்த படங்கள் எனக்கு தெரியாமல் வெளியாகி விட்டன. ஏராளமானோர் போனில் எனக்கு வாழ்த்து தெரிவித்தனர். என் திருமணத்தை நடிகர்-நடிகைகள் மற்றும் நண்பர்கள் அனைவரையும் அழைத்து விமரிசையாக நடத்துவேன்”.
இவ்வாறு நடிகை பாவனா கூறினார்.
நிச்சயதார்த்தத்தில் கலந்துகொண்ட ஒருவர் அந்த படங்களை இணையதளத்தில் கசியவிட்ட பிறகே வெளி உலகத்துக்கு தெரியவந்தது. பாவனாவும், நவீனும் பல வருடங்களாக காதலித்து வந்தனர். கடந்த வருடம் இருவரும் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டனர். ஆனால் பாவனா தந்தையும், நவீன் தாயும் அடுத்தடுத்து மரணம் அடைந்ததால் திருமணத்தை தள்ளி வைத்தனர்.
இந்த நிலையில்தான் கொச்சியில் மலையாள படப்பிடிப்பை முடித்து விட்டு திரும்பிய பாவனா காரில் கடத்தப்பட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இது பட உலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பாவனா புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதனால் பாவனா திருமணம் நடக்குமா என்பது கேள்விக்குறியானது. இந்த நிலையில்தான் திருமண நிச்சயதார்த்தம் திடீரென்று நடந்து முடிந்துள்ளது. நிச்சயதார்த்தம் அவரசமாக நடந்தது ஏன்? என்பது குறித்து பாவனா அளித்த பேட்டி வருமாறு:-
“நானும், நவீனும் நீண்ட காலமாக பழகி திருமணம் செய்து கொள்ளும் முடிவில் இருந்தோம். நவீன் குடும்பத்தினர் சம்பிரதாயத்துக்காக என்னை பெண் பார்ப்பதற்காக வீட்டுக்கு வந்தனர். இருவீட்டாரும் திருமணம் பற்றி கலந்து பேசிக்கொண்டு இருந்தார்கள். இப்போதே மோதிரம் மாற்றிக்கொள்ளலாமே என்ற யோசனை கிளம்பியதால் அவசரமாக நிச்சயதார்த்தம் முடிந்து விட்டது.
நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு கூட தெரியப்படுத்த முடியவில்லை. எனக்கு திருமணம் நடப்பது வரை நிச்சயதார்த்தம் நடந்ததை வெளியில் சொல்ல வேண்டாம் என்று நினைத்தேன். ஆனால் நிச்சயதார்த்த படங்கள் எனக்கு தெரியாமல் வெளியாகி விட்டன. ஏராளமானோர் போனில் எனக்கு வாழ்த்து தெரிவித்தனர். என் திருமணத்தை நடிகர்-நடிகைகள் மற்றும் நண்பர்கள் அனைவரையும் அழைத்து விமரிசையாக நடத்துவேன்”.
இவ்வாறு நடிகை பாவனா கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X