search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    தனுஷ், அனிருத், டிடி, ஹன்சிகா அந்தரங்க போட்டோக்களை வெளியிட்ட சுசித்ரா
    X

    தனுஷ், அனிருத், டிடி, ஹன்சிகா அந்தரங்க போட்டோக்களை வெளியிட்ட சுசித்ரா

    தனுஷ், அனிருத் ஆகியோரின் அந்தரங்க போட்டோக்களை வெளியிட்டு மீண்டும் சுசித்ரா சர்ச்சையில் சிக்கியுள்ளார். இதுகுறித்த விரிவான செய்தியை கீழே பார்ப்போம்.
    கடந்த சில நாட்களாக பின்னணி பாடகி சுசித்ராவின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் தளத்தில் சர்ச்சைக்குரிய பதிவுகள் பதிவு செய்யப்பட்டு வருகிறது. இதுகுறித்து சுசித்ரா எதுவும் வாய் திறக்காத நிலையில், அவரது கணவர் கார்த்திக், சுசித்ராவின் டுவிட்டர் கணக்கை யாரோ சிலபேர் முடக்கிவிட்டதாகவும், அவர்கள்தான் தகாத பதிவுகளை வெளியிட்டதாகவும், தற்போது சுசித்ராவின் டுவிட்டர் கணக்கை திரும்ப பெற்றுவிட்டதாகவும் விளக்கம் அளித்தார்.

    இனிமேல், அவரது டுவிட்டர் கணக்கில் இதுபோன்ற சர்ச்சைக்குரிய பதிவுகள் வராது என்று எண்ணியிருந்த வேளையில், திடீரென்று அவரது டுவிட்டர் தளத்தில் தனுஷ்-திரிஷா, அனிருத்-ஆண்ட்ரியா, டிடி, ஹன்சிகா உள்ளிட்டவர்களின் அந்தரங்க புகைப்படங்களை வெளியிட்டு, மீண்டும் சர்ச்சையில் சிக்கினார். இந்த படங்களால் திரையுலக பிரபலங்கள் பலரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.



    அந்த புகைப்படங்களை பதிவு செய்த சிலமணி நேரங்களிலேயே சுசித்ராவின் டுவிட்டர் கணக்கில் இருந்து அந்த புகைப்படங்கள் எல்லாம் அகற்றப்பட்டுவிட்டது. இதுகுறித்து விளக்கம் அளிக்கும்வகையில் சுசித்ராவின் டுவிட்டர் கணக்கில் மேலும் சில பதிவுகள் வெளிவந்துள்ளது.

    அதாவது, நான் இதைப் போன்று மோசமானவற்றை பகிர்வேன் என்று நினைப்பவர்கள் என்னை தொடரவேண்டாம். இதுபோல் அடிக்கடி நடப்பது எனக்கு எரிச்சலாக இருக்கிறது. நான் நடிகர், நடிகைகளுடன் பேசுவதே கிடையாது. அவர்களின் புகைப்படங்கள் எதுவும் என்னிடம் கிடையாது. இதையெல்லாம்விட நான் இப்படி மற்றவர்களை இழிவுபடுத்தும் ஆளும் கிடையாது.



    இந்த மாதிரி வேலை செய்துகொண்டிருக்கும் நபரின் ஆசை நான் எனது டுவிட்டர் கணக்கை முடக்கிவிட வேண்டும் என்பதே. என்னை நிஜமாகவே நேசிக்கும் மக்கள் இங்கு இருக்கிறார்கள் என்பது எனக்கு தெரியும். எனவே, என்ன செய்யவேண்டும் என்பதை யோசித்துக் கொண்டிருக்கிறேன். என்னை உண்மையாக பின்தொடர்பவர்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.



    என்னை வெறுப்பவர்கள் நீங்களாகவே என்னை தொடர்வதை நிறுத்திவிடுங்கள். என்னால் யாருக்கும் தொந்தரவு வேண்டாம். என் கணக்கை முடக்கியவர்களும் என்னை தயவுசெய்து தொடரவேண்டாம். இந்த விஷயத்தில் நான் யாரையும் குற்றம் சொல்லப்போவதில்லை. காவல்துறையிடமும் புகார் செய்யப்போவதில்லை. வெறுப்பவர்கள் தயவுசெய்து என்னை தொடரவேண்டாம் என்றும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    இவ்வளவு விளக்கம் வந்தபோதிலும், இந்த பதிவுகளையும் சுசித்ராதான் பதிவு செய்தாரா? என்ற கேள்வி அனைவர் மனதிலும் ஏற்பட்டுள்ளது. இதற்கு சுசித்ரா நேரில் வந்து பதில் சொன்னால்தான் இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி விழும் என்று கோலிவுட் வட்டாரங்களில் கூறப்படுகிறது. 
    Next Story
    ×