என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா
X
கன்னடத்தில் அஜித் படம் செய்யும் பெரிய சாதனை
Byமாலை மலர்2 March 2017 4:59 AM GMT (Updated: 2 March 2017 7:26 AM GMT)
அஜித் நடித்த ‘என்னை அறிந்தால்’ படம் கன்னடத்தில் புதிய சாதனை படைத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இதுகுறித்த செய்தியை கீழே விரிவாக பார்ப்போம்.
கவுதம் மேனன் இயக்கத்தில் அஜித் நடித்து கடந்த 2015-ஆம் ஆண்டு வெளிவந்து வெற்றிபெற்ற படம் ‘என்னை அறிந்தால்’. இப்படத்தில் அஜித் சத்யதேவ் ஐபிஎஸ் என்ற போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தார். அஜித்தின் வெற்றிப் படங்களில் இதுவும் ஒன்று. தல ரசிகர்களுக்கு இப்படம் உண்மையிலேயே மிகப்பெரிய விருந்தாக அமைந்தது.
இந்நிலையில், இப்படத்தை கன்னட மொழியிலும் டப் செய்ய படக்குழுவினர் முடிவு செய்திருந்தனர். அதன்படி, இப்படத்தை கன்னடத்தில் டப் செய்து ‘சத்யதேவ் ஐபிஎஸ்’ என்ற பெயரில் நாளை (மார்ச்-3) வெளியாகிறது. அங்கு இப்படம் சுமார் 60 திரையரங்குகளில் வெளியாகப் போவதாக செய்திகள் வெளியாகிறது. தமிழ் படம் ஒன்று கன்னடத்தில் இவ்வளவு திரையரங்குகளில் வெளியாவது இதுவே முதல் முறை என்று கூறப்படுகிறது.
இப்படத்தில் திரிஷா, அனுஷ்கா, விவேக், அருண் விஜய் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருந்தார். படத்தைப் போலவே இப்படத்தின் பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது. தமிழில் ஏ.எம்.ரத்னம் இப்படத்தை பிரம்மாண்டமாக தயாரித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், இப்படத்தை கன்னட மொழியிலும் டப் செய்ய படக்குழுவினர் முடிவு செய்திருந்தனர். அதன்படி, இப்படத்தை கன்னடத்தில் டப் செய்து ‘சத்யதேவ் ஐபிஎஸ்’ என்ற பெயரில் நாளை (மார்ச்-3) வெளியாகிறது. அங்கு இப்படம் சுமார் 60 திரையரங்குகளில் வெளியாகப் போவதாக செய்திகள் வெளியாகிறது. தமிழ் படம் ஒன்று கன்னடத்தில் இவ்வளவு திரையரங்குகளில் வெளியாவது இதுவே முதல் முறை என்று கூறப்படுகிறது.
இப்படத்தில் திரிஷா, அனுஷ்கா, விவேக், அருண் விஜய் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருந்தார். படத்தைப் போலவே இப்படத்தின் பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது. தமிழில் ஏ.எம்.ரத்னம் இப்படத்தை பிரம்மாண்டமாக தயாரித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X