search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    கண்டாங்கி சேலை கட்டி நடித்தது புதிய அனுபவம்: அமீர் பட நாயகி
    X

    கண்டாங்கி சேலை கட்டி நடித்தது புதிய அனுபவம்: அமீர் பட நாயகி

    அமீர் இயக்கி வரும் ‘சந்தனத்தேவன்’ படத்தில் கண்டாங்கி சேலை கட்டி நடித்தது புதிய அனுபவமாக இருந்ததாக நாயகி அதிதி மேனன் கூறியுள்ளார். இதுகுறித்த விரிவான செய்தியை கீழே பார்ப்போம்
    ‘பட்டதாரி’ படத்தில் நாயகியாக நடித்தவர் அதிதிமேனன். அடுத்து அமீர் இயக்கும் ‘சந்தனதேவன்’ படத்தில் நடிக்கிறார். 1980 காலகட்டத்தில் நடக்கும் கதையாக உருவாகும் இதன் முதல்கட்ட படப்பிடிப்பு கடந்த 21-ந்தேதி மதுரையில் தொடங்கியது. யுவன் சங்கர் ராஜா இசையில் உருவான ஒரு பாடலுக்கான நடன காட்சியை அமீர் படமாக்கினார்.

    இதில் நடித்தது குறித்து அதிதிமேனன் கூறும்போது... “கேரளத்து பெண்ணான நான், இந்த படத்தில் மதுரை பெண்ணாக நடிக்கிறேன். கதைப்படி நான் இதில் ஆர்யாவின் தம்பி சத்யாவுக்கு ஜோடியாக வருகிறேன். இதில் எந்த மாதிரி வேடம் என்பது இதுவரை எனக்கு தெரியாது.



    முதலில் எடுத்த பாடல் காட்சியில் ஆர்யா, சத்யா இன்னொரு புதுமுக நடிகை ஆகியோருடன் நான் இணைந்து நடனம் ஆடினேன். இந்த பாடல் காட்சிக்காக கண்டாங்கி சேலை கட்டி நடித்தேன். அந்த ‘கெட்-அப்’ என்னை முழுவதும் மாற்றி விட்டது. என் வாழ்க்கையில் முதன் முதலாக கண்டாங்கி சேலை கட்டியது இப்போது தான்.

    நானே அசந்து போகும்படி மாறி இருந்தேன். அந்த மேக்கப்பில் மெலோடி பாடலுக்கு நடனம் ஆடியது புதிய, இனிய அனுபவம். மார்ச் முதல் வாரத்தில் இருந்து ஏப்ரல் முதல் வாரம் வரை ‘சந்தனதேவன்’ அடுத்தகட்ட படப்பிடிப்பில் தொடர்ந்து நடிக்க இருக்கிறேன்” என்றார்.

    Next Story
    ×