search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    தனுஷின் பவர் பாண்டி படப்பிடிப்பு நிறைவு
    X

    தனுஷின் பவர் பாண்டி படப்பிடிப்பு நிறைவு

    தனுஷ் இயக்கிவரும் ‘பவர் பாண்டி’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. இதுகுறித்த செய்தியை கீழே விரிவாக பார்ப்போம்.
    நடிகர், பாடகர், பாடலாசிரியர், தயாரிப்பாளர் என சினிமாவில் பன்முகம் கொண்ட தனுஷ், இயக்குனராக அவதாரம் எடுத்திருக்கும் படம்தான் ‘பவர் பாண்டி’. இப்படத்தில் ராஜ்கிரண் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். பிரசன்னா, சாயா சிங், டெல்லி கணேஷ், ரோபோ சங்கர், வித்யூலேகா ராமன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். தனுஷ், ரேவதி, கவுதம் வாசுதேவ் மேனன் ஆகியோர் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளனர்.

    மூன்று கட்டமாக நடைபெற்ற இப்படத்தின் படப்பிடிப்பு நேற்றுடன் முடிந்துள்ளது. ராஜ்கிரண் கேக் வெட்டி படப்பிடிப்பை முடித்து வைத்தார். இப்படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் ஏற்கெனவே தொடங்கி நடைபெற்று வருகிறது. படப்பிடிப்பு முடிவடைந்துள்ளதையடுத்து, மீதி பணிகளையும் விரைந்து முடிக்க திட்டமிட்டுள்ளனர்.



    ஏப்ரல் 14-ந் தேதி தமிழ் புத்தாண்டையொட்டி இப்படம் வெளியாகும் என ஏற்கனெவே அறிவித்துள்ளனர். இப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். தனுஷின் வுண்டர் பார் பிலிம்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது. 
    Next Story
    ×