search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    ஆஸ்கர் விழாவில் மறைந்த இந்தி நடிகர் ஓம் புரிக்கு இசை அஞ்சலி
    X

    ஆஸ்கர் விழாவில் மறைந்த இந்தி நடிகர் ஓம் புரிக்கு இசை அஞ்சலி

    ஆஸ்கர் விருது வழங்கும் விழாவின் போது பிரபல இந்தி நடிகர் ஓம்புரிக்கு இசை அஞ்சலி செலுத்தப்பட்டது. இது குறித்த விரிவான செய்தியை கீழே பார்க்கலாம்.
    ஆஸ்கர் விருது வழங்கும் விழாவின்போது மறைந்த பிரபல திரையுலக பிரமுகர்கள் - ஆலிவுட் படஉலகின் மறைந்த உறுப்பினர்களுக்கு தொகுப்பு இசை அஞ்சலி செலுத்துவது வழக்கம். அந்தவகையில் கடந்த ஓராண்டில் மறைந்த பிரபல திரையுலக பிரமுகர்களுக்கு லாஸ்ஏஞ்சல்ஸ் நகரில் நடந்த 89-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் இசை அஞ்சலி செலுத்தப்பட்டது.



    இதில் கடந்த மாதம் மரணம் அடைந்த பிரபல இந்தி நடிகர் ஓம்புரி மற்றும் கேரி பிஷர், பிரின்ஸ், ஜீனே வில்டர், மிச்சல் சிமினோ உள்ளிட்டோர் அடங்குவர். இந்த நிகழ்ச்சியில், கிராமி விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட பிரபல பாடகியும், பாடல் ஆசிரியையுமான சாரா பாரெலீஸ் கலந்து கொண்டு ஓம்புரிக்கு இசை அஞ்சலி செலுத்தினார். இதற்கு இந்தி திரையுலக பிரமுகர்கள் வரவேற்பு தெரிவித்து உள்ளனர்.

    ஈஸ்ட் இஸ் ஈஸ்ட், காந்தி, சிட்டி ஆப் ஜாய், உல்ப் உள்ளிட்ட மேற்கத்திய படங்களில் நடித்தவர் ஓம்புரி என்பது நினைவு கூரத்தக்கது.
    Next Story
    ×