search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    பாவனா படுக்கை அறையில் ரகசிய கேமரா வைத்த டிரைவர்: திடுக் தகவல் அம்பலம்
    X

    பாவனா படுக்கை அறையில் ரகசிய கேமரா வைத்த டிரைவர்: திடுக் தகவல் அம்பலம்

    பாவனா படுக்கை அறையில் ரகசிய கேமரா வைத்ததாக டிரைவர் சுனில் குறித்த திடுக் தகவல் அம்பலமாகியுள்ளது. இந்த சம்பவம் குறித்த முழுதகவலை கீழே பார்ப்போம்.
    நடிகை பாவனாவின் கார் டிரைவர் சுனில் பற்றி தினமும் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளது.

    நடிகை பாவனாவை கடத்தி பாலியல் துன்புறுத் தல் செய்த கார் டிரைவர் சுனிலை கேரள திரைப்படதுறையினர் பல்சர் சுனில்  என்று செல்லமாக அழைப்பார்கள். அந்த அளவுக்கு திரைஉலக பிரபலங்களுக்கு நன்கு பரிட்சயமானவன்.

    மலையாள திரை உலகினருக்கு வெளியில் செல்ல டிரைவர்கள், கார்கள் தேவைப்பட்டால் சுனில் அனுப்பிவைப்பான்.  டிரைவர்களை வேலைக்கும் அனுப்பி வைப்பான், தற்காலிகமாக கார் ஓட்டவும் டிரைவர்களை அனுப்பிவைப்பான். மலையாள  சினிமா துறையில் பல சங்கங்களில் உறுப்பினர் அட்டையும் வைத்திருந்தான். இதனால் அவன் மீது திரை உலகினருக்கு  நம்பிக்கை ஏற்பட்டது.



    இந்த நிலையில் தமிழ்ப் பட வாய்ப்புகள் குறைந்ததால் பாவனா தனது தாயாரோடு சென்னையில் இருந்து கேரளாவுக்கு  குடிபெயர்ந்தார். அங்கு அவரிடம் முதலில் தற்காலிக டிரைவராக சுனில் பணிபுரிந்தான். ஏற்றத்தாழ்வு பார்க்காமல் சகஜமாக  பழகியதால் அவன் மீது பாவனாவுக்கு நம்பிக்கை ஏற்பட்டு நிரந்தர டிரைவராக வேலைக்கு அமர்த்திக் கொண்டார்.

    பாவனா வீட்டுக்குள் எல்லா அறைகளுக்கும் சென்று வரக்கூடிய வகையில் சுனில் பழகினான். பாவனா மூலம் மற்ற  நடிகைகளுடன் சுனில் பழகினான். சுனிலுக்கு அவர் முழு சுதந்திரம் அளித்தது தாயாருக்கு பிடிக்கவில்லை. அடிக்கடி மகளை  எச்சரித்து வந்தார்.

    ஒரு நாள் பாவனா இல்லாத சமயத்தில் அவரது படுக்கை அறைக்குள் சுனில் சென்று ரகசிய கேமரா வைத்தான். இதை தாயார்  பார்த்து விட்டார். உடனே மகளிடம் சொல்லவே சுனிலை வேலையை விட்டு நிறுத்திவிட்டார் பாவனா.



    அதன் பிறகு பிரபல தமிழ்நடிகையின் முன்னாள் கணவரும் மலையாள நடிகருமான ஒருவரிடம், சுனில் வேலைக்கு சேர்ந்தான்.  அங்கும் நடிகரின் தற்போதைய மனைவியான நடன நடிகையுடன் நெருங்கிப் பழகி அவரது வீட்டிலும் ரகசிய கேமரா வைத்த  போது சுனில் மாட்டிக்கொண்டான். இதனால் அங்கிருந்தும் விரட்டியடிக்கப்பட்டான்.

    இதனால் விரக்தி அடைந்த சுனில் தவறான பாதையில் சென்று தற்போது பாவனா கடத்தலில் சிக்கி தேடப்படும்  குற்றவாளியாகிவிட்டான்.
    Next Story
    ×