என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா
X
எம்.ஜி.ஆர்.-ஜெயலலிதா நடித்த ‘அடிமைப்பெண்’ டிஜிட்டல் வடிவில் வருகிறது
Byமாலை மலர்18 Feb 2017 10:12 AM GMT (Updated: 18 Feb 2017 10:12 AM GMT)
எம்.ஜி.ஆர்-ஜெயலலிதா நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படம் ‘அடிமைப்பெண்'. இப்படத்தை டிஜிட்டல் வடிவில் வெளிவர உள்ளது. இதுகுறித்த முழுசெய்தியை கீழே பார்க்கலாம்.
எம்.ஜி.ஆர்-ஜெயலலிதா நடித்து எம்.ஜி.ஆர் பிக்சர்ஸ் பிரமாண்டமாக தயாரித்த படம் ‘அடிமைப்பெண்’. வசூல் சாதனை படைத்த ‘அடிமைப் பெண்’ 25 வாரம் அமோகமாக ஓடியது. எம்.ஜி.ஆர். இதில் அப்பா, மகன் என இரண்டு கதாப்பாத்திரங்களில் நடித்தார்.
ஜெயலலிதாவும் இரட்டை வேடம் ஏற்றிருந்தார். ஜோதி லட்சுமி, ஆர்.எஸ்.மனோகர், சோ, ராஜஸ்ரீ, அசோகன், சந்திரபாபு, ஜஸ்டின், பண்டரிபாய் ஆகியோர் நடித்திருந்தனர்.
கே.வி.மகாதேவன் இசையில் பாடல்கள் அனைத்தும் பிரபலம். சொர்ணம் வசனம் எழுத கே.சங்கர் இயக்கத்தில் படம் உருவானது.
1969 ஆம் ஆண்டு வெளியான அடிமைப்பெண் படத்தில் எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடிய “ஆயிரம் நிலவே வா” பாடல் மூலம் பிரபலம் ஆனார். ஜெயலலிதா முதன் முதலாக பாடிய “அம்மா என்றால் அன்பு” பாடலும் சூப்பர் ஹிட் ஆனது.
படப்பிடிப்பு முழுக்க முழுக்க ஜெய்ப்பூர் ராஜஸ்தான் போன்ற இடங்களில் நடைபெற்றது.
48 வருடங்களுக்குப் பிறகு ‘அடிமைப்பெண்’ படத்தை தி ரிஷிஸ் மூவீஸ் நிறுவனத்தை சேர்ந்த சாய் நாகராஜன்.கே. படத்தை அதி நவீன டிஜிட்டலில் மாற்றி வெளியிடுகிறார்.
“எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா ஆண்டில் புதுப்பொலிவுடன் உருவாகி இருக்கும். ‘அடிமைப்பெண்’ படத்தை நவீனப் படுத்தி வெளியிடுவதில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார்.
ஜெயலலிதாவும் இரட்டை வேடம் ஏற்றிருந்தார். ஜோதி லட்சுமி, ஆர்.எஸ்.மனோகர், சோ, ராஜஸ்ரீ, அசோகன், சந்திரபாபு, ஜஸ்டின், பண்டரிபாய் ஆகியோர் நடித்திருந்தனர்.
கே.வி.மகாதேவன் இசையில் பாடல்கள் அனைத்தும் பிரபலம். சொர்ணம் வசனம் எழுத கே.சங்கர் இயக்கத்தில் படம் உருவானது.
1969 ஆம் ஆண்டு வெளியான அடிமைப்பெண் படத்தில் எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடிய “ஆயிரம் நிலவே வா” பாடல் மூலம் பிரபலம் ஆனார். ஜெயலலிதா முதன் முதலாக பாடிய “அம்மா என்றால் அன்பு” பாடலும் சூப்பர் ஹிட் ஆனது.
படப்பிடிப்பு முழுக்க முழுக்க ஜெய்ப்பூர் ராஜஸ்தான் போன்ற இடங்களில் நடைபெற்றது.
48 வருடங்களுக்குப் பிறகு ‘அடிமைப்பெண்’ படத்தை தி ரிஷிஸ் மூவீஸ் நிறுவனத்தை சேர்ந்த சாய் நாகராஜன்.கே. படத்தை அதி நவீன டிஜிட்டலில் மாற்றி வெளியிடுகிறார்.
“எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா ஆண்டில் புதுப்பொலிவுடன் உருவாகி இருக்கும். ‘அடிமைப்பெண்’ படத்தை நவீனப் படுத்தி வெளியிடுவதில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X