என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா
X
அஜித் பட வில்லன் நடிகருக்கு அரிவாள் வெட்டு
Byமாலை மலர்15 Feb 2017 7:05 AM GMT (Updated: 15 Feb 2017 7:05 AM GMT)
'ஜனா' படத்தில் வில்லனாக நடித்த மலையாள சினிமா நடிகர் பாபுராஜுக்கு அரிவாள் வெட்டு விழுந்தது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மலையாள சினிமா நடிகர் பாபுராஜ். இவர் தமிழில் 'ஜனா' என்ற படத்தில் வில்லனாக நடித்துள்ளார். மேலும் தெலுங்கு, கன்னடம், இந்தி உள்பட பிறமொழி படங்களிலும் நடித்து வருகிறார்.
கேரள மாநிலம் இடுக்கி அருகே அடிமாலி என்ற இடத்தில் நடிகர் பாபுராஜுக்கு சொந்தமான பண்ணை வீடு உள்ளது. இதன் அருகே உள்ள குளத்து தண்ணீரை நடிகர் பாபுராஜு தனது பண்ணை வீட்டு பயன்பாட்டுக்கு எடுத்து வருகிறார்.
மேலும் அந்த பகுதி மக்களும் அந்த குளத்து தண்ணீரை பயன்படுத்தி வருகிறார்கள்.
இந்த நிலையில் இந்த குளத்தை தூர்வார நடிகர் பாபுராஜு ஏற்பாடு செய்தார். ஆனால் தற்போது தண்ணீர் பற்றாக்குறை உள்ள சூழ்நிலையில் இந்த குளத்தை தூர்வாரக்கூடாது என்று அந்த பகுதி மக்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் நடிகர் பாபுராஜுக்கும் அவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இந்த தகராறு முற்றியதில் சன்னி என்பவர் அரிவாளால் நடிகர் பாபுராஜை சரமாரியாக அரிவாளால் வெட்டிவிட்டு தப்பி ஓடிவிட்டார். இதில் படுகாயம் அடைந்த நடிகர் பாபுராஜு எர்ணாகுளத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுபற்றி புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சன்னி உள்பட 5 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கேரள மாநிலம் இடுக்கி அருகே அடிமாலி என்ற இடத்தில் நடிகர் பாபுராஜுக்கு சொந்தமான பண்ணை வீடு உள்ளது. இதன் அருகே உள்ள குளத்து தண்ணீரை நடிகர் பாபுராஜு தனது பண்ணை வீட்டு பயன்பாட்டுக்கு எடுத்து வருகிறார்.
மேலும் அந்த பகுதி மக்களும் அந்த குளத்து தண்ணீரை பயன்படுத்தி வருகிறார்கள்.
இந்த நிலையில் இந்த குளத்தை தூர்வார நடிகர் பாபுராஜு ஏற்பாடு செய்தார். ஆனால் தற்போது தண்ணீர் பற்றாக்குறை உள்ள சூழ்நிலையில் இந்த குளத்தை தூர்வாரக்கூடாது என்று அந்த பகுதி மக்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் நடிகர் பாபுராஜுக்கும் அவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இந்த தகராறு முற்றியதில் சன்னி என்பவர் அரிவாளால் நடிகர் பாபுராஜை சரமாரியாக அரிவாளால் வெட்டிவிட்டு தப்பி ஓடிவிட்டார். இதில் படுகாயம் அடைந்த நடிகர் பாபுராஜு எர்ணாகுளத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுபற்றி புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சன்னி உள்பட 5 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X