என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா
X
ஒரு விஜய்யின் கதையை கைப்பற்றிய மற்றொரு விஜய்
Byமாலை மலர்4 Feb 2017 8:11 AM GMT (Updated: 4 Feb 2017 8:11 AM GMT)
ஒரு விஜய் விட்ட கதையை மற்றொரு விஜய் கைப்பற்றியுள்ளார். அது எந்த விஜய் என்பதை கீழே பார்க்கலாம்.
ஜீவா சங்கர் இயக்கத்தில் விஜய் ஆண்டனி-மியா ஜார்ஜ் நடிப்பில் உருவாகியுள்ள படம் எமன். இப்படத்திற்கான பாடல் வெளியீட்டு விழா சென்னையில் இன்று நடந்தது. இந்த நிகழ்ச்சியில் எமன் படக்குழுவினருடன் சேர்ந்து தமிழ் சினிமாவின் பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர்.
அப்போது, அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய விஜய் சேதுபதி, எமன் படத்தின் கதையை ஜீவா சங்கர் முதலில் தன்னிடம் தெரிவித்ததாக கூறினார். அந்தநேரத்தில் எனது கைவசம் பல படங்கள் இருந்ததால் எமன் படத்தில் நடிக்க முடியாத சூழல் ஏற்பட்டது. தற்போது, விஜய் ஆண்டனி அந்த கதையில் நடித்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. தொடர்ந்து வித்தியாசமான கதைகளையே தேர்வு செய்யும் விஜய் ஆண்டனி தற்போதும் ஒரு சிறப்பான கதையையே தேர்ந்தெடுத்து நடித்துள்ளார். இந்த கதையை தேர்ந்தெடுத்த அவரது தன்னம்பிக்கையை பாராட்டுகிறேன் என்றும் விஜய் சேதுபதி கூறினார்.
இயக்குநர் சசி, ரூபா மஞ்சரி, கிருத்திகா உதயநிதி, சார்லி, எஸ்.ஏ.சந்திரசேகர், ஞானவேல் ராஜா, தனஞ்செயன், மகிழ் திருமேனி உள்ளிட்ட பலரும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
லைகா ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் முன்னாள் நடிகர் தியாகராஜன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தை சிவராத்திரியை முன்னிட்டு பிப்ரவரி 24-ஆம் தேதி ரிலீஸ் செய்ய படக்குழு முடிவு செய்துள்ளது.
அப்போது, அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய விஜய் சேதுபதி, எமன் படத்தின் கதையை ஜீவா சங்கர் முதலில் தன்னிடம் தெரிவித்ததாக கூறினார். அந்தநேரத்தில் எனது கைவசம் பல படங்கள் இருந்ததால் எமன் படத்தில் நடிக்க முடியாத சூழல் ஏற்பட்டது. தற்போது, விஜய் ஆண்டனி அந்த கதையில் நடித்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. தொடர்ந்து வித்தியாசமான கதைகளையே தேர்வு செய்யும் விஜய் ஆண்டனி தற்போதும் ஒரு சிறப்பான கதையையே தேர்ந்தெடுத்து நடித்துள்ளார். இந்த கதையை தேர்ந்தெடுத்த அவரது தன்னம்பிக்கையை பாராட்டுகிறேன் என்றும் விஜய் சேதுபதி கூறினார்.
இயக்குநர் சசி, ரூபா மஞ்சரி, கிருத்திகா உதயநிதி, சார்லி, எஸ்.ஏ.சந்திரசேகர், ஞானவேல் ராஜா, தனஞ்செயன், மகிழ் திருமேனி உள்ளிட்ட பலரும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
லைகா ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் முன்னாள் நடிகர் தியாகராஜன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தை சிவராத்திரியை முன்னிட்டு பிப்ரவரி 24-ஆம் தேதி ரிலீஸ் செய்ய படக்குழு முடிவு செய்துள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X