என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா
X
ஆர்யாவுக்கு வில்லனை உருவாக்கிய அமீர்
Byமாலை மலர்25 Jan 2017 9:50 AM GMT (Updated: 25 Jan 2017 9:51 AM GMT)
அமீர் இயக்கவுள்ள ‘சந்தனத்தேவன்’ படத்துக்கு வில்லன் ரெடியாகிவிட்டார். அவர் யார்? என்பதை தெரிந்துகொள்ளே கீழே வாருங்கள்.
அமீர் சமீபத்தில் ஜல்லிக்கட்டை மையப்படுத்தி ‘சந்தனத்தேவன்’ என்ற படத்தை இயக்கப்போவதாக அறிவித்திருந்தார். இந்த படத்தில் ஆர்யாவும், அவருடைய தம்பி சத்யாவும் நடிக்கவுள்ளதாக அறிவித்திருந்தார். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ள நிலையில், இப்படத்தில் வில்லன் வேடத்திற்கு நடிக்க சுலீல் குமார் என்பவர் ஒப்பந்தமாகியிருக்கிறார். இவர் ‘காளை’, ‘தகராறு’, ‘குங்கமப்பூவும் கொஞ்சும் புறாவும்’ ஆகிய படங்களிலி முக்கியமான வேடத்தில் நடித்தவர்.
இந்த படத்தில் நடிப்பது குறித்து சுலீல் குமார் கூறும்போது, அமீர் சாருடைய ‘பருத்திவீரன்’ படம் ரிலீசாகும் சமயத்தில்தான் நான் சினிமாவுக்குள் நுழைந்தேன். அவருடைய படத்தில் நடிக்கவேண்டும் என்ற கனவு தற்போது நிறைவேறியுள்ளது. அவருடைய படத்தில் நடிப்பது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது.
இப்படம் மதுரை - தேனி ஏரியாவை மையப்படுத்தி எடுக்கப்படுகிறது. எனவே, என்னுடைய தோற்றத்தை முரட்டுத்தனமாகவும், அதேநேரத்தில் மதுரைக்கார பையன் போலவும் மாற்ற முயற்சித்துக் கொண்டிருக்கிறேன். அதேபோல், நீண்ட தாடியும் வைத்துக் கொண்டிருக்கிறேன். இன்னும் ஒருவாரத்திற்குள் இந்த படத்துக்கான கெட்டப் எனக்கு வந்துவிடும் என்று நினைக்கிறேன்.
பிப்ரவரியில் இப்படத்தின் படப்பிடிப்பை தொடங்கப்போவதாக கூறியுள்ளனர். இந்த படத்தில் என்னுடைய கதாபாத்திரம் படம் முழுக்க இருக்கும் என்றும், எனக்கு மிகவும் முக்கியத்துவமான கதாபாத்திரமாக இருக்கும் என்றார்.
இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ள நிலையில், இப்படத்தில் வில்லன் வேடத்திற்கு நடிக்க சுலீல் குமார் என்பவர் ஒப்பந்தமாகியிருக்கிறார். இவர் ‘காளை’, ‘தகராறு’, ‘குங்கமப்பூவும் கொஞ்சும் புறாவும்’ ஆகிய படங்களிலி முக்கியமான வேடத்தில் நடித்தவர்.
இந்த படத்தில் நடிப்பது குறித்து சுலீல் குமார் கூறும்போது, அமீர் சாருடைய ‘பருத்திவீரன்’ படம் ரிலீசாகும் சமயத்தில்தான் நான் சினிமாவுக்குள் நுழைந்தேன். அவருடைய படத்தில் நடிக்கவேண்டும் என்ற கனவு தற்போது நிறைவேறியுள்ளது. அவருடைய படத்தில் நடிப்பது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது.
இப்படம் மதுரை - தேனி ஏரியாவை மையப்படுத்தி எடுக்கப்படுகிறது. எனவே, என்னுடைய தோற்றத்தை முரட்டுத்தனமாகவும், அதேநேரத்தில் மதுரைக்கார பையன் போலவும் மாற்ற முயற்சித்துக் கொண்டிருக்கிறேன். அதேபோல், நீண்ட தாடியும் வைத்துக் கொண்டிருக்கிறேன். இன்னும் ஒருவாரத்திற்குள் இந்த படத்துக்கான கெட்டப் எனக்கு வந்துவிடும் என்று நினைக்கிறேன்.
பிப்ரவரியில் இப்படத்தின் படப்பிடிப்பை தொடங்கப்போவதாக கூறியுள்ளனர். இந்த படத்தில் என்னுடைய கதாபாத்திரம் படம் முழுக்க இருக்கும் என்றும், எனக்கு மிகவும் முக்கியத்துவமான கதாபாத்திரமாக இருக்கும் என்றார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X