என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா
X
பனித்த கண்களுடன் நான் பார்ப்பது மாணவர் கூட்டமல்ல: கண்கலங்கிய கமல்
Byமாலை மலர்21 Jan 2017 6:48 AM GMT (Updated: 21 Jan 2017 6:48 AM GMT)
தொடர்ந்து ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து வரும் கமல் மாணவர்களின் கூட்டத்தை பார்த்து கண்கலங்குவதாக கூறியுள்ளார். இதுகுறித்த தகவலை கீழே பார்க்கலாம்.
உலக நாயகன் கமல்ஹாசன் தொடக்கம் முதலே ஜல்லிக்கட்டு ஆதரவு தெரிவித்து வருகிறார். தொடர்ந்து ஜல்லிக்கட்டு நடக்கவேண்டி
வலியுறுத்தி வந்த கமல் தற்போது ஜல்லிக்கட்டுக்கு வேண்டி அறவழியில் போராட்டம் நடத்தி வரும் மாணவர்கள், இளைஞர்களுக்கு தனது ஆதரவையும், பாராட்டுகளையும் தெரிவித்த அவர், தொடர்ந்து தனது டுவிட்டர் பக்கத்தில் மாணவர்களை ஊக்கப்படுத்தி சில டுவிட்டுகளையும் போட்டு வருகிறார்.
முன்னதாக நடிகை த்ரிஷாவிக்கு எதிர்ப்பு தெரிவித்து இளைஞர்கள் போராடிய போது, "அவர்க்கும் நமக்குமுள வேற்றுமை ஊரறியட்டும் கன்னியும் வாழ நம் காளையும் வாழ வழி செய்வோம். தர்க்கம் தொடர்க நேசத்துடன்'' என்று தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டிருந்தார்.
பின்னர், 'ராட்டையை சின்னமாக்கி முன்பு ஒரு அறப்போராட்டம் வென்றது. இன்று மாட்டைச் சின்னமாக்கி நடக்கும் அறப்போராட்டமமும் வெல்லும். ஊக்கமது கைவிடேல்' என்று பதிவுசெய்திருந்தார்.
இந்நிலையில், ''நான் TV செய்தியை பார்ப்பது உங்களைப் பார்க்கத்தான். பனித்த கண்களுடன் நான் பார்ப்பது மாணவர் கூட்டமல்ல நவ நல்லாசிரியர் கூட்டம். வணங்குகிறேன்'' என்று கூறி கண்கலங்குவதாக தெரிவித்துள்ளார்.
வலியுறுத்தி வந்த கமல் தற்போது ஜல்லிக்கட்டுக்கு வேண்டி அறவழியில் போராட்டம் நடத்தி வரும் மாணவர்கள், இளைஞர்களுக்கு தனது ஆதரவையும், பாராட்டுகளையும் தெரிவித்த அவர், தொடர்ந்து தனது டுவிட்டர் பக்கத்தில் மாணவர்களை ஊக்கப்படுத்தி சில டுவிட்டுகளையும் போட்டு வருகிறார்.
முன்னதாக நடிகை த்ரிஷாவிக்கு எதிர்ப்பு தெரிவித்து இளைஞர்கள் போராடிய போது, "அவர்க்கும் நமக்குமுள வேற்றுமை ஊரறியட்டும் கன்னியும் வாழ நம் காளையும் வாழ வழி செய்வோம். தர்க்கம் தொடர்க நேசத்துடன்'' என்று தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டிருந்தார்.
பின்னர், 'ராட்டையை சின்னமாக்கி முன்பு ஒரு அறப்போராட்டம் வென்றது. இன்று மாட்டைச் சின்னமாக்கி நடக்கும் அறப்போராட்டமமும் வெல்லும். ஊக்கமது கைவிடேல்' என்று பதிவுசெய்திருந்தார்.
இந்நிலையில், ''நான் TV செய்தியை பார்ப்பது உங்களைப் பார்க்கத்தான். பனித்த கண்களுடன் நான் பார்ப்பது மாணவர் கூட்டமல்ல நவ நல்லாசிரியர் கூட்டம். வணங்குகிறேன்'' என்று கூறி கண்கலங்குவதாக தெரிவித்துள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X