என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா
X
மெரினாவில் மகனை காணாமல் தேடி அலைந்த இயக்குனர் தங்கர்பச்சான்
Byமாலை மலர்21 Jan 2017 3:27 AM GMT (Updated: 21 Jan 2017 3:27 AM GMT)
சென்னை மெரினா கடற்கரையில் போராட்டக்குழுவினரை சந்தித்து ஆதரவு தெரிவிப்பதற்காக சென்ற இயக்குனர் தங்கர்பச்சான் தனது மகனை காணாமல் சிறிது நேரம் பரிதவித்தார். இது குறித்த விரிவான செய்தியை பார்க்கலாம்.
இயக்குனர் தங்கர்பச்சான் போராட்டக்குழுவினரை சந்தித்து ஆதரவு தெரிவிப்பதற்காக நேற்று மெரினா கடற்கரைக்கு காரில் வந்தார். காரை அவருடைய மகன் விஜித்பச்சான் (வயது 24) ஓட்டி வந்தார். விவேகானந்தர் இல்லம் முன்பு காரில் இருந்து தங்கர்பச்சான் இறங்கிவிட்டார். அவருடைய மகன் விஜித்பச்சான் காரை பார்க்கிங் செய்துவிட்டு வருவதாக கூறி சென்றார்.
இந்தநிலையில் இளைஞர்கள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துவிட்டு தங்கர்பச்சான் வெளியே வந்து, மகனுக்காக காத்திருந்தார். நீண்ட நேரம் ஆகியும் அவர் வரவில்லை. இதையடுத்து அவர் எங்கே இருக்கிறார்? என்பதை அறிவதற்காக செல்போனில் தொடர்புகொண்டார். ஆனால் பலமுறை தொடர்புகொண்டும் விஜித்பச்சானின் செல்போன் இணைப்பு கிடைக்கவில்லை.
அங்கு ‘மைக்’ மூலம் கூட்டத்தை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்த இளைஞர்களிடம், ‘தன்னுடைய மகன் விஜித்பச்சானை காணவில்லை என்ற விவரத்தை கூறினார். இதையடுத்து தங்கர்பச்சான் மகன் விஜித்பச்சான் எங்கிருந்தாலும் விவேகானந்தர் இல்லம் முன்பு வரும்படி மைக் மூலம் தொடர்ந்து அழைப்பு விடுக்கப்பட்டது.
தங்கர்பச்சானும் செல்போன் மூலம் அவரை தொடர்பு கொள்ள முயற்சி செய்துகொண்டே இருந்தார். அதற்கு பலனாக விஜித்பச்சானின் செல்போன் இணைப்பு கிடைத்தது. அப்போது தான் இருக்கும் இடத்தை அவர் கூறினார். இதையடுத்து தங்கர்பச்சான் தனது மகனை பார்க்க சென்றார்.
இந்தநிலையில் இளைஞர்கள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துவிட்டு தங்கர்பச்சான் வெளியே வந்து, மகனுக்காக காத்திருந்தார். நீண்ட நேரம் ஆகியும் அவர் வரவில்லை. இதையடுத்து அவர் எங்கே இருக்கிறார்? என்பதை அறிவதற்காக செல்போனில் தொடர்புகொண்டார். ஆனால் பலமுறை தொடர்புகொண்டும் விஜித்பச்சானின் செல்போன் இணைப்பு கிடைக்கவில்லை.
அங்கு ‘மைக்’ மூலம் கூட்டத்தை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்த இளைஞர்களிடம், ‘தன்னுடைய மகன் விஜித்பச்சானை காணவில்லை என்ற விவரத்தை கூறினார். இதையடுத்து தங்கர்பச்சான் மகன் விஜித்பச்சான் எங்கிருந்தாலும் விவேகானந்தர் இல்லம் முன்பு வரும்படி மைக் மூலம் தொடர்ந்து அழைப்பு விடுக்கப்பட்டது.
தங்கர்பச்சானும் செல்போன் மூலம் அவரை தொடர்பு கொள்ள முயற்சி செய்துகொண்டே இருந்தார். அதற்கு பலனாக விஜித்பச்சானின் செல்போன் இணைப்பு கிடைத்தது. அப்போது தான் இருக்கும் இடத்தை அவர் கூறினார். இதையடுத்து தங்கர்பச்சான் தனது மகனை பார்க்க சென்றார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X