என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா
X
சூர்யாவை நெகிழச் செய்த விஜய் ரசிகர்
Byமாலை மலர்19 Jan 2017 2:29 AM GMT (Updated: 19 Jan 2017 2:29 AM GMT)
`சி-3' படம் ரிலீசாவதை முன்னிட்டு கேரளா சென்ற சூர்யாவை சந்தித்த விஜய் ரசிகர் அவரை நெகிழச் செய்துள்ளார். இதுகுறித்த செய்தியை கீழே பார்க்கலாம்.
ஹரி இயக்கத்தில் சூர்யா நடிப்பில் `சி-3' படம் ஜனவரி 26-ம் தேதி திரைக்கு வர உள்ளது. இதற்காக பட புரமோஷன் வேலைகளில் படக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர். அதன் ஒருபகுதியாக சூர்யா தமிழகம் மற்றும் கேரளாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.
கேரளாவில் படத் தயாரிப்பாளர்கள் போராட்டத்தால் சி-3 படம் ரிலீசாவதில் சந்தேகம் ஏற்பட்டது. இந்நிலையில், படம் ரீலீசாவது உறுதி செய்யப்பட்டுள்ளதால் கேரளா சென்ற சூர்யா, படம் ரிலீசாக உள்ள திரையரங்குகளை பார்வையிட்டார்.
அப்போது, சூர்யாவை காண திரளான ரசிகர்கள் கூடியிருந்தனர். தமிழகத்தை போல கேரளாவிலும் விஜய், சூர்யாவுக்கு ரசிகர் பட்டாளம் அதிகம் என்பது தெரிந்த ஒன்றுதான். இந்நிலையில், மாற்றுத்திறனாளி விஜய் ரசிகர் ஒருவர், சூர்யாவிடம் நான் விஜய்யின் தீவிர ரசிகன். எனக்காக இந்த புகைப்படத் தொகுப்பை விஜய் அண்ணாவிடம் கொடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். சூர்யா அந்த புகைப்படத்தொகுப்பை பெற்றுக்கொண்டு, விஜய்யிடம் கண்டிப்பாக இதனை கொடுப்பதாக உறுதியளித்தார். இந்தசம்பவம் அங்கு கூடியிருந்த அனைவரையும் நெகிழச் செய்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் தமிழகத்தில் சூர்யா உள்ளிட்ட முன்னணி நடிகர், நடிகர்கள் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவும், பீட்டாவுக்கு எதிர்ப்பும் தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.
கேரளாவில் படத் தயாரிப்பாளர்கள் போராட்டத்தால் சி-3 படம் ரிலீசாவதில் சந்தேகம் ஏற்பட்டது. இந்நிலையில், படம் ரீலீசாவது உறுதி செய்யப்பட்டுள்ளதால் கேரளா சென்ற சூர்யா, படம் ரிலீசாக உள்ள திரையரங்குகளை பார்வையிட்டார்.
அப்போது, சூர்யாவை காண திரளான ரசிகர்கள் கூடியிருந்தனர். தமிழகத்தை போல கேரளாவிலும் விஜய், சூர்யாவுக்கு ரசிகர் பட்டாளம் அதிகம் என்பது தெரிந்த ஒன்றுதான். இந்நிலையில், மாற்றுத்திறனாளி விஜய் ரசிகர் ஒருவர், சூர்யாவிடம் நான் விஜய்யின் தீவிர ரசிகன். எனக்காக இந்த புகைப்படத் தொகுப்பை விஜய் அண்ணாவிடம் கொடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். சூர்யா அந்த புகைப்படத்தொகுப்பை பெற்றுக்கொண்டு, விஜய்யிடம் கண்டிப்பாக இதனை கொடுப்பதாக உறுதியளித்தார். இந்தசம்பவம் அங்கு கூடியிருந்த அனைவரையும் நெகிழச் செய்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் தமிழகத்தில் சூர்யா உள்ளிட்ட முன்னணி நடிகர், நடிகர்கள் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவும், பீட்டாவுக்கு எதிர்ப்பும் தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X