என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா
X
ஜல்லிக்கட்டு விவகாரம்: டுவிட்டரில் இருந்து விலகிய திரிஷா
Byமாலை மலர்16 Jan 2017 7:17 AM GMT (Updated: 16 Jan 2017 7:17 AM GMT)
ஜல்லிக்கட்டு விவகாரத்தில் தனக்கு எதிர்ப்பு வலுத்து வரும் நிலையில் திரிஷா டுவிட்டரில் இருந்து விலகியுள்ளார். இதுகுறித்த விரிவான செய்தியை கீழே பார்ப்போம்..
தமிழகத்தில் ஜல்லிக்கட்டு விவகாரம் காட்டுத்தீ போல் பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில், ஜல்லிக்கட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்த ‘பீட்டா’ அமைப்பில் நடிகை திரிஷா இருப்பதை கண்டித்து ஜல்லிக்கட்டு ஆதரவாளர்கள் கடந்த சில தினங்களுக்கு முன்பு திரிஷா கலந்துகொண்ட படப்பிடிப்பு தளத்திற்கு சென்று அந்த படப்பிடிப்பை நடத்தவிடாமல் செய்தனர்.
திரிஷாவும் தன் பங்குக்கு தான் ஜல்லிக்கட்டுக்கு எதிரானவள் இல்லை என்று கருத்து தெரிவித்து வந்தாலும், தொடர்ந்து ஜல்லிக்கட்டு ஆதரவாளர்கள் திரிஷாவை கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். இது, சமூக வலைத்தளங்களிலும் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டே வருகிறது.
இதனால் மனமுடைந்த திரிஷா, டுவிட்டர் பக்கத்தில் இருந்து விலகியுள்ளார். தற்போது, அவருடைய டுவிட்டர் பக்கம் செயலிழந்து போயுள்ளது. திரிஷாவின் இந்த முடிவு தொடருமா? அல்லது ஜல்லிக்கட்டு விவகாரம் முடிந்த பிறகு மீண்டும் அவர் டுவிட்டர் பக்கத்துக்கு வருவாரா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.
திரிஷாவும் தன் பங்குக்கு தான் ஜல்லிக்கட்டுக்கு எதிரானவள் இல்லை என்று கருத்து தெரிவித்து வந்தாலும், தொடர்ந்து ஜல்லிக்கட்டு ஆதரவாளர்கள் திரிஷாவை கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். இது, சமூக வலைத்தளங்களிலும் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டே வருகிறது.
இதனால் மனமுடைந்த திரிஷா, டுவிட்டர் பக்கத்தில் இருந்து விலகியுள்ளார். தற்போது, அவருடைய டுவிட்டர் பக்கம் செயலிழந்து போயுள்ளது. திரிஷாவின் இந்த முடிவு தொடருமா? அல்லது ஜல்லிக்கட்டு விவகாரம் முடிந்த பிறகு மீண்டும் அவர் டுவிட்டர் பக்கத்துக்கு வருவாரா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X