search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    ஜெயலலிதா மரணம் பற்றி பிரதமருக்கு எழுதிய கடிதம் குறித்து கேட்டதால் பாதியில் பேட்டியை முடித்த கவுதமி
    X

    ஜெயலலிதா மரணம் பற்றி பிரதமருக்கு எழுதிய கடிதம் குறித்து கேட்டதால் பாதியில் பேட்டியை முடித்த கவுதமி

    ஜெயலலிதா மரணம் பற்றி பிரதமருக்கு எழுதிய கடிதம் குறித்து கேட்டதால் பேட்டியை பாதியிலேயே முடித்துவிட்டு கவுதமி கிளம்பினார். இதுகுறித்த செய்தியை கீழே பார்க்கலாம்.
    கமலுடன் 13 ஆண்டுகள் வாழ்ந்த கவுதமி சமீபத்தில் கமலை விட்டு பிரிந்தார். ஆனால் அதற்கான காரணம் எதையும் கூறவில்லை.  ‘எனது மகள் சுப்புலட்சுமிக்கு நல்ல தாயாக இருக்க விரும்புகிறேன்’ என்று மட்டும் கூறி இருந்தார்.

    மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா மரணம் அடைந்தபோது, அதில் சந்தேகம் இருப்பதாகவும், அதுபற்றிய உண்மையை  வெளியிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பிரதமருக்கு கவுதமி கடிதம் எழுதினார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.  அவரது கடிதத்துக்கு இதுவரை பதில் கிடைக்கவில்லை.

    இந்த நிலையில் கவுதமி ஒரு பண்பலை வானொலியில் பேட்டி அளிக்க சென்றார். அவரிடம் கேட்கப்பட்ட முதல் கேள்வி, “நீங்கள்  ஏன் உலகநாயகன் கமல்ஹாசனை பிரிந்தீர்கள்?” இதை கேட்ட உடனே கவுதமி லேசாக கோபப்படத் தொடங்கினார்.

    அடுத்து, “ முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து நீங்கள் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியது விளம்பரம்  தேடத்தானே?” என்று கேட்டது தான் தாமதம், ஆவேசம் அடைந்த கவுதமி கோபம் அடைந்து பாதியிலேயே பேட்டியை  முடித்துக்கொண்டு கிளம்பிவிட்டார்.
    Next Story
    ×