என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா
X
காவ்யா மாதவன் சினிமாவை விட்டு விலகினார்?
Byமாலை மலர்5 Jan 2017 4:11 AM GMT (Updated: 5 Jan 2017 4:11 AM GMT)
மலையாள நடிகர் திலீப்பை இரண்டாவது திருமணம் செய்து கொண்ட நடிகை காவ்யா மாதவன் சினிமாவை விட்டு விலகி விட்டதாகவும் அவரை வீட்டில் முடக்கி வைத்து விட்டதாகவும் பரபரப்பு புகார் கிளம்பி இருக்கிறது.
மலையாள பட உலகில் ‘நம்பர்-1’ கதாநாயகியாக இருந்து, காசி, என்மன வானில், சாது மிரண்டா படங்களில் நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியிலும் பிரபலமானவர் காவ்யா மாதவன். இவர் 2009-ம் ஆண்டு நிஷால் சந்திரா என்பவரை மணந்து ஒரு வருடத்திலேயே அவரை விவாகரத்து செய்து பிரிந்தார். அதன்பிறகு மலையாள நடிகர் திலீப்பை கடந்த நவம்பர் மாதம் இரண்டாவது திருமணம் செய்து கொண்டார்.
திலீப்பும் தனது முதல் மனைவியும் நடிகையுமான மஞ்சு வாரியரை விவாகரத்து செய்து விட்டுத்தான் காவ்யா மாதவனை மணந்தார்.
காவ்யா மாதவனுக்கு திருமணத்துக்கு பிறகும் சினிமாவில் தொடர்ந்து நடிக்க ஆசை இருந்ததாகவும் முதல் கணவர் அதற்கு தடைவிதித்ததால் அவரை விவாகரத்து செய்து விட்டு மீண்டும் சினிமாவில் நடிக்க வந்ததாகவும் கூறப்பட்டது.
எனவே திலீப், காவ்யா மாதவனை தொடர்ந்து சினிமாவில் நடிக்க அனுமதிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் திருமணத்துக்கு பிறகு காவ்யா மாதவன் இதுவரை எந்த படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகவில்லை. சினிமாவை விட்டு அவர் விலகி விட்டதாக மலையாள பட உலகில் தகவல் பரவி உள்ளது. இது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
சினிமாவில் நடிக்க தடை விதித்து வீட்டில் அவரை முடக்கி வைத்து விட்டதாக சமூக வலைத்தளங்களில் விமர்சித்து வருகிறார்கள். மஞ்சு வாரியரையும் இதுபோலவே திருமணத்துக்கு பிறகு சினிமாவில் நடிக்க திலீப் அனுமதிக்கவில்லை என்றும் விவாகரத்துக்கு பிறகுதான் சினிமாவில் தற்போது முழுவீச்சில் அவர் நடித்து வருகிறார் என்றும் கூறுகிறார்கள்.
இதற்கு திலீப் மற்றும் காவ்யா மாதவனிடம் இருந்து விளக்கம் எதுவும் வெளியாகவில்லை. காவ்யா மாதவனை வீட்டில் யாரும் முடக்கவில்லை என்றும் சினிமாவில் நடிக்காமல் இருப்பது அவர் சுயமாக எடுத்த முடிவு என்றும் நெருக்கமானவர்கள் கூறினார்கள்.
திலீப்பும் தனது முதல் மனைவியும் நடிகையுமான மஞ்சு வாரியரை விவாகரத்து செய்து விட்டுத்தான் காவ்யா மாதவனை மணந்தார்.
காவ்யா மாதவனுக்கு திருமணத்துக்கு பிறகும் சினிமாவில் தொடர்ந்து நடிக்க ஆசை இருந்ததாகவும் முதல் கணவர் அதற்கு தடைவிதித்ததால் அவரை விவாகரத்து செய்து விட்டு மீண்டும் சினிமாவில் நடிக்க வந்ததாகவும் கூறப்பட்டது.
எனவே திலீப், காவ்யா மாதவனை தொடர்ந்து சினிமாவில் நடிக்க அனுமதிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் திருமணத்துக்கு பிறகு காவ்யா மாதவன் இதுவரை எந்த படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகவில்லை. சினிமாவை விட்டு அவர் விலகி விட்டதாக மலையாள பட உலகில் தகவல் பரவி உள்ளது. இது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
சினிமாவில் நடிக்க தடை விதித்து வீட்டில் அவரை முடக்கி வைத்து விட்டதாக சமூக வலைத்தளங்களில் விமர்சித்து வருகிறார்கள். மஞ்சு வாரியரையும் இதுபோலவே திருமணத்துக்கு பிறகு சினிமாவில் நடிக்க திலீப் அனுமதிக்கவில்லை என்றும் விவாகரத்துக்கு பிறகுதான் சினிமாவில் தற்போது முழுவீச்சில் அவர் நடித்து வருகிறார் என்றும் கூறுகிறார்கள்.
இதற்கு திலீப் மற்றும் காவ்யா மாதவனிடம் இருந்து விளக்கம் எதுவும் வெளியாகவில்லை. காவ்யா மாதவனை வீட்டில் யாரும் முடக்கவில்லை என்றும் சினிமாவில் நடிக்காமல் இருப்பது அவர் சுயமாக எடுத்த முடிவு என்றும் நெருக்கமானவர்கள் கூறினார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X