என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா
X
கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்: நடிகர் அஜித் சென்னை திரும்பினார்
Byமாலை மலர்24 Dec 2016 12:31 PM GMT (Updated: 24 Dec 2016 12:31 PM GMT)
பல்கேரியா படப்பிடிப்பில் இருந்த அஜித் மனைவி ஷாலினியுடன் கிறிஸ்துமஸ் கொண்டாடுவதற்காக சென்னை திரும்பியுள்ளார்.
சிவா இயக்கத்தில் அஜித் நடிக்கும் அவரது 57-வது படப்பிடிப்பு பல்கேரியாவில் நடந்து வருகிறது. இதில் கஜால் அகர்வால், அக்ஷராஹாசன் உள்பட பலர் நடித்து வருகிறார்கள். இந்தி நடிகர் விவேக் ஒப்ராய் வில்லனாக நடிக்கிறார். சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்து வருகிறது.
சமீபத்தில் அஜித் மோட்டார் சைக்கிளில் சாகசம் (வீலிங்) செய்யும் காட்சி இணையதளத்தில் வெளியானது. இதையடுத்து, அஜித் கறுப்பு டீசர், ஜீன்ஸ் பேண்ட், கண்ணாடி, தொப்பியுடன் ஸ்டைலாக போஸ் கொடுக்கும் புகைப்படம் ஒன்று இணையதளங்களில் வெளியாகி இருக்கிறது.
காஜல் அகர்வால் பல்கேரியாவில் இயற்கை எழில் கொஞ்சும் பகுதிகளில் நீர் துளிகள் பனிக்கட்டியாக உறைந்திருப்பதை புகைப்படமாக எடுத்து அவரது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார்.
பல்கேரியாவில் நடந்து வரும் இரண்டாம் கட்ட படப்பிடிப்புடன் இந்த படத்தின் 80 சதவீத படப்பிடிப்பு முடிந்துவிடும் என்று கூறப்படுகிறது. மீதம் உள்ள 20 சதவீத படப்பிடிப்பை ஐதராபாத்தில் உள்ள திரைப்பட நகரில் நடத்த திட்டமிட்டுள்ளனர். இந்த நிலையில் கிறிஸ்துமஸ் கொண்டாடுவதற்காக அஜித் பல்கேரியாவில் இருந்து சென்னை திரும்பினார்.
இந்த படத்தின் பாடல்களை மார்ச் மாதம் வெளியிட முடிவு செய்து இருக்கிறார்கள். படத்தை தமிழ் புத்தாண்டில் திரைக்கு கொண்டுவர திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
சமீபத்தில் அஜித் மோட்டார் சைக்கிளில் சாகசம் (வீலிங்) செய்யும் காட்சி இணையதளத்தில் வெளியானது. இதையடுத்து, அஜித் கறுப்பு டீசர், ஜீன்ஸ் பேண்ட், கண்ணாடி, தொப்பியுடன் ஸ்டைலாக போஸ் கொடுக்கும் புகைப்படம் ஒன்று இணையதளங்களில் வெளியாகி இருக்கிறது.
காஜல் அகர்வால் பல்கேரியாவில் இயற்கை எழில் கொஞ்சும் பகுதிகளில் நீர் துளிகள் பனிக்கட்டியாக உறைந்திருப்பதை புகைப்படமாக எடுத்து அவரது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார்.
பல்கேரியாவில் நடந்து வரும் இரண்டாம் கட்ட படப்பிடிப்புடன் இந்த படத்தின் 80 சதவீத படப்பிடிப்பு முடிந்துவிடும் என்று கூறப்படுகிறது. மீதம் உள்ள 20 சதவீத படப்பிடிப்பை ஐதராபாத்தில் உள்ள திரைப்பட நகரில் நடத்த திட்டமிட்டுள்ளனர். இந்த நிலையில் கிறிஸ்துமஸ் கொண்டாடுவதற்காக அஜித் பல்கேரியாவில் இருந்து சென்னை திரும்பினார்.
இந்த படத்தின் பாடல்களை மார்ச் மாதம் வெளியிட முடிவு செய்து இருக்கிறார்கள். படத்தை தமிழ் புத்தாண்டில் திரைக்கு கொண்டுவர திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X