என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா
X
திருமணமான நடிகர்களிடம் குழந்தை குறித்து கேளுங்கள்?-வித்யா பாலன் ஆவேசம்
Byமாலை மலர்3 Dec 2016 8:15 AM GMT (Updated: 3 Dec 2016 8:15 AM GMT)
திருமணமான நடிகர்களைப் பார்த்து இன்னும் ஏன் குழந்தை பெற்றுக் கொள்ளவில்லை? என கேளுங்கள் என்று பாலிவுட் நடிகை வித்யாபாலன் தெரிவித்துள்ளார். அவர் எதற்காக அப்படிக் கூறினார்? என்பதற்கான விளக்கத்தை கீழே பார்க்கலாம்.
வித்யாபாலன் நடித்துள்ள ‘கஹானி-2’ படம் திரைக்கு வந்துள்ளது. இதையொட்டி அவர் அளித்த பேட்டியில் "எனது திருமண வாழ்க்கை பற்றியும்,நான் எப்போது குழந்தை பெறப்போகிறேன்? என்றும் திரும்பத் திரும்ப கேட்கிறார்கள்.
திருமணம் ஆன நடிகர்களும் இருக்கிறார்கள். அவர்களிடம் போய் உங்கள் மனைவியை எப்போது கர்ப்பிணி ஆக்குவீர்கள்? என்று யாரும் கேட்பது இல்லை. நடிகர்களிடம் உங்கள் திருமண வாழ்க்கை எப்படி இருக்கிறது? என்று கூட யாரும் கேட்பது கிடையாது.
திருமணம் ஆன பெண் என்பதையும் கடந்து எனக்கு என்று ஒரு தனி அடையாளம் இருக்கிறது. என் வாழ்வில் எனக்கு நான் தான் முக்கியம் என்று கூறினால் ஒருமாதிரி பார்க்கிறார்கள். திருமணமாகி விட்டதால் என் கணவர் தான் முக்கியமானவர் என நான் கூற வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள்.
என் கணவரை நான் மிகவும் நேசிக்கிறேன். என்றாலும் என் வாழ்வில் நான் தான் முக்கியமானவள். இப்படி நான் சொல்வதால் என்னை சுயநலவாதி என்று நினைத்தாலும் அதைப்பற்றி எனக்கு கவலை இல்லை” என்றார்.
திருமணம் ஆன நடிகர்களும் இருக்கிறார்கள். அவர்களிடம் போய் உங்கள் மனைவியை எப்போது கர்ப்பிணி ஆக்குவீர்கள்? என்று யாரும் கேட்பது இல்லை. நடிகர்களிடம் உங்கள் திருமண வாழ்க்கை எப்படி இருக்கிறது? என்று கூட யாரும் கேட்பது கிடையாது.
திருமணம் ஆன பெண் என்பதையும் கடந்து எனக்கு என்று ஒரு தனி அடையாளம் இருக்கிறது. என் வாழ்வில் எனக்கு நான் தான் முக்கியம் என்று கூறினால் ஒருமாதிரி பார்க்கிறார்கள். திருமணமாகி விட்டதால் என் கணவர் தான் முக்கியமானவர் என நான் கூற வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள்.
என் கணவரை நான் மிகவும் நேசிக்கிறேன். என்றாலும் என் வாழ்வில் நான் தான் முக்கியமானவள். இப்படி நான் சொல்வதால் என்னை சுயநலவாதி என்று நினைத்தாலும் அதைப்பற்றி எனக்கு கவலை இல்லை” என்றார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X