search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    திருமணமான நடிகர்களிடம் குழந்தை குறித்து கேளுங்கள்?-வித்யா பாலன் ஆவேசம்
    X

    திருமணமான நடிகர்களிடம் குழந்தை குறித்து கேளுங்கள்?-வித்யா பாலன் ஆவேசம்

    திருமணமான நடிகர்களைப் பார்த்து இன்னும் ஏன் குழந்தை பெற்றுக் கொள்ளவில்லை? என கேளுங்கள் என்று பாலிவுட் நடிகை வித்யாபாலன் தெரிவித்துள்ளார். அவர் எதற்காக அப்படிக் கூறினார்? என்பதற்கான விளக்கத்தை கீழே பார்க்கலாம்.
    வித்யாபாலன் நடித்துள்ள ‘கஹானி-2’ படம் திரைக்கு வந்துள்ளது. இதையொட்டி அவர் அளித்த பேட்டியில் "எனது திருமண வாழ்க்கை பற்றியும்,நான் எப்போது குழந்தை பெறப்போகிறேன்? என்றும் திரும்பத் திரும்ப கேட்கிறார்கள்.

    திருமணம் ஆன நடிகர்களும் இருக்கிறார்கள். அவர்களிடம் போய் உங்கள் மனைவியை எப்போது கர்ப்பிணி ஆக்குவீர்கள்? என்று யாரும் கேட்பது இல்லை. நடிகர்களிடம் உங்கள் திருமண வாழ்க்கை எப்படி இருக்கிறது? என்று கூட யாரும் கேட்பது கிடையாது.

    திருமணம் ஆன பெண் என்பதையும் கடந்து எனக்கு என்று ஒரு தனி அடையாளம் இருக்கிறது. என் வாழ்வில் எனக்கு நான் தான் முக்கியம் என்று கூறினால் ஒருமாதிரி பார்க்கிறார்கள். திருமணமாகி விட்டதால் என் கணவர் தான் முக்கியமானவர் என நான் கூற வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள்.

    என் கணவரை நான் மிகவும் நேசிக்கிறேன். என்றாலும் என் வாழ்வில் நான் தான் முக்கியமானவள். இப்படி நான் சொல்வதால் என்னை சுயநலவாதி என்று நினைத்தாலும் அதைப்பற்றி எனக்கு கவலை இல்லை” என்றார்.
    Next Story
    ×