என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா
ஸ்ரேயாவிடம் மன்னிப்பு கடிதம் வாங்கிய டைரக்டர்
ரஜினி ஜோடியாக நடித்த ஸ்ரேயா, தற்போது எந்த படம் என்றாலும் என்ன வேடம் கிடைத்தாலும் நடிக்கிறார். தமிழில் சிம்புவின் ‘அன்பானவன், அசராதவன் அடங்காதவன்’ படத்தில் வயதான சிம்புவின் ஜோடியாக நடிக்கிறார்.
தெலுங்கில் மூத்த ஹீரோ பாலகிருஷ்ணாவுக்கு ஜோடியாக “கவுதமி புத்ர சடர்கனி” என்ற படத்தில் நடிக்கிறார். ஸ்ரேயாவை விட இரண்டு மடங்கு வயது மூத்த நாயகன் இவர். இந்த படத்தில் நடிக்கும் போது எடுத்த புகைப்படங்களை ஸ்ரேயா தனது இணைய தள பக்கத்தில் வெளியிட்டார். படத்துக்கான முதல் போஸ்டர் கூட வெளியாகாத நிலையில் இந்த படங்களை பார்த்த படத்தின் இயக்குனர், தயாரிப்பாளர், நாயகன் பாலகிருஷ்ணா ஆகியோர் டென்ஷன் ஆகி விட்டனர்.
இதனால் ஸ்ரேயாவை அழைத்து அவர்கள் கடித்து கொண்டது மட்டுமல்ல, இனி இப்படி செய்ய மாட்டேன். செய்த தவறுக்கு வருந்துகிறேன் என்று எழுதி கேட்டு இருக்கிறார்கள். தலை விதியை நொந்து கொண்ட ஸ்ரேயா, வேறு வழியில்லாமல் பள்ளிக்கூட மாணவி போல மன்னிப்புக் கடிதம் எழுதி கொடுத்திருக்கிறார். தெலுங்கு பட வட்டாரத்தில் இதுபற்றி பரபரப்பாக பேசிக் கொள்கிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்