என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா
X
கரீனா கபூர் கருவில் வளரும் குழந்தையின் பாலினத்தை கண்டறியவில்லை: சயீப் அலிகான் மறுப்பு
Byமாலை மலர்8 Nov 2016 4:47 AM GMT (Updated: 8 Nov 2016 4:48 AM GMT)
தனது மனைவியான நடிகை கரீனா கபூர் கருவில் வளரும் குழந்தையின் பாலினத்தை கண்டறிந்ததாக கூறப்படும் தகவலை நடிகர் சயீப் அலிகான் மறுத்துள்ளார்.
இந்தி திரையுலகில் பிரபல நடிகராக வலம் வருபவர் நடிகர் சயீப் அலிகான். இவருக்கும், நடிகை கரீனா கபூருக்கும் இடையே காதல் மலர்ந்தது. இருவரும் கடந்த 2012-ம் ஆண்டு மண வாழ்க்கையில் இணைந்தனர்.
கடந்த ஜனவரி மாதம் சயீப் அலிகான் சமூக வலைதளம் மூலமாக கரீனா கபூர் கர்ப்பம் தரித்திருப்பதாகவும், டிசம்பரில் தங்களுக்கு முதல் குழந்தை பிறக்கும் எனவும் அறிவித்தார்.
இந்நிலையில் கரீனா கபூரின் கருவில் வளரும் குழந்தையின் பாலினம் கண்டறியப்பட்டதாக பரபரப்பு தகவல் வெளியானது. மேலும் பிறக்கப்போகும் குழந்தைக்கு ‘சயீப்பீனா’ என்று பெயர் சூட்டியுள்ளதாகவும், லண்டனில் குழந்தை பெற்றுக்கொள்ள உள்ளதாகவும் தகவல் பரவியது.
இதற்கு பதிலளித்து நடிகர் சயீப் அலிகான் கூறியிருப்பதாவது:-
எங்கள் குழந்தையின் பாலினத்தை கண்டறிந்ததாகவும், லண்டன் சென்று குழந்தை பெற்றுக்கொள்ளப்போவதாகவும் கூறப்படும் தகவல் உண்மைக்கு புறம்பானது. பிறக்கப்போகும் குழந்தைக்கு கண்டிப்பாக சயீப்பீனா என்ற பெயரை வைக்க மாட்டோம். எனவே இனிமேலும் தேவையில்லாத வதந்திகளை பரப்பவேண்டாம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
நடிகர் சயீப் அலிகான் ஏற்கனவே திருமணமானவர். இவரது முதல் மனைவி அமிர்தா சிங். இவர்களுக்கு சாரா என்ற மகளும், இப்ராகிம் என்ற மகனும் உள்ளனர். இருவரும் 2004-ம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்தது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஜனவரி மாதம் சயீப் அலிகான் சமூக வலைதளம் மூலமாக கரீனா கபூர் கர்ப்பம் தரித்திருப்பதாகவும், டிசம்பரில் தங்களுக்கு முதல் குழந்தை பிறக்கும் எனவும் அறிவித்தார்.
இந்நிலையில் கரீனா கபூரின் கருவில் வளரும் குழந்தையின் பாலினம் கண்டறியப்பட்டதாக பரபரப்பு தகவல் வெளியானது. மேலும் பிறக்கப்போகும் குழந்தைக்கு ‘சயீப்பீனா’ என்று பெயர் சூட்டியுள்ளதாகவும், லண்டனில் குழந்தை பெற்றுக்கொள்ள உள்ளதாகவும் தகவல் பரவியது.
இதற்கு பதிலளித்து நடிகர் சயீப் அலிகான் கூறியிருப்பதாவது:-
எங்கள் குழந்தையின் பாலினத்தை கண்டறிந்ததாகவும், லண்டன் சென்று குழந்தை பெற்றுக்கொள்ளப்போவதாகவும் கூறப்படும் தகவல் உண்மைக்கு புறம்பானது. பிறக்கப்போகும் குழந்தைக்கு கண்டிப்பாக சயீப்பீனா என்ற பெயரை வைக்க மாட்டோம். எனவே இனிமேலும் தேவையில்லாத வதந்திகளை பரப்பவேண்டாம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
நடிகர் சயீப் அலிகான் ஏற்கனவே திருமணமானவர். இவரது முதல் மனைவி அமிர்தா சிங். இவர்களுக்கு சாரா என்ற மகளும், இப்ராகிம் என்ற மகனும் உள்ளனர். இருவரும் 2004-ம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்தது குறிப்பிடத்தக்கது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X