என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா
X
பெண்கள் எல்லோரையும் எப்போதும் நேசிக்கிறேன்: ஷாருக்கான்
Byமாலை மலர்7 Nov 2016 12:24 PM GMT (Updated: 7 Nov 2016 12:24 PM GMT)
பெண்கள் எல்லோரையும் எப்போதும் நேசிப்பதாக பாலிவுட் நடிகர் ஷாருக்கான் தெரிவித்துள்ளார். இதுகுறித்த விரிவான செய்தியை கீழே பார்ப்போம்...
இந்தி நடிகர் ஷாருக்கான் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சிக்காக அளித்த பேட்டியில், இந்தி சினிமாவில் கடந்த 25 வருடங்களாக காதல் பற்றி புரிந்துகொள்வதில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் குறித்து கேட்கப்பட்டது. இதற்கு அவர் அளித்த பதில்...
“சினிமா ஒரு கலை, ஒரு தொழில். திருமணம் ஆன பெண்களையும், திருமண நிச்சயதார்த்தம் நடந்த பெண்களையும் எனக்கு பிடிக்கும். எல்லா பெண்களையும் நேசிக்கிறேன். அவர்களை பின் தொடர்ந்து சென்று அவர்களிடம் இருக்கும் நல்ல விஷயங்களையும், அவர்களுடைய பல்வேறு பரிமாணங்களையும் அறிந்து கொள்வதில் ஆர்வம் உண்டு. இது எனக்குள்ள ஒரு பிரச்சினைதான். ஆனால் இதை திரும்பத் திரும்பச் செய்வதால்தான் எனக்கு தீர்வு கிடைக்கிறது.
காதலின் அனைத்துப் பக்கங்களையும் எனக்கு தெரியும். அது வினோதமானது. பெண்களை நேசிக்கும் ஒருவர் ஷேக்ஸ்பியரின் அனைத்து நாடகங்களையும் விரும்பும் ஒருவராகவோ, சினிமாவை பற்றி அனைத்தும் தெரிந்த ஒருவராகவோ இருக்கலாம். நானும் அப்படிப்பட்ட ஒருவன்தான். எனது அழகு, உடல் சார்ந்தது மட்டுமல்ல. நான் உங்களை சிரிக்கவோ, அழவோ வைக்கும் போது ஏற்படும் கவர்ச்சியிலும் நேசம் உள்ளது. எனக்காக உங்களை இயங்க வைக்கும் போதும், உங்களுக்காக ஏங்கி நிற்கும்போதும் அதை நான் சிறப்பாக செய்கிறேன்.
நான் காதலில் நம்பிக்கை வைத்திருக்கிறேன். அதைப் பற்றி எனக்கு நன்றாகவே தெரியும். எனவே எப்போதும் பெண்களிடம் எனது நேசம் இருக்கும்” என்றார்.
“சினிமா ஒரு கலை, ஒரு தொழில். திருமணம் ஆன பெண்களையும், திருமண நிச்சயதார்த்தம் நடந்த பெண்களையும் எனக்கு பிடிக்கும். எல்லா பெண்களையும் நேசிக்கிறேன். அவர்களை பின் தொடர்ந்து சென்று அவர்களிடம் இருக்கும் நல்ல விஷயங்களையும், அவர்களுடைய பல்வேறு பரிமாணங்களையும் அறிந்து கொள்வதில் ஆர்வம் உண்டு. இது எனக்குள்ள ஒரு பிரச்சினைதான். ஆனால் இதை திரும்பத் திரும்பச் செய்வதால்தான் எனக்கு தீர்வு கிடைக்கிறது.
காதலின் அனைத்துப் பக்கங்களையும் எனக்கு தெரியும். அது வினோதமானது. பெண்களை நேசிக்கும் ஒருவர் ஷேக்ஸ்பியரின் அனைத்து நாடகங்களையும் விரும்பும் ஒருவராகவோ, சினிமாவை பற்றி அனைத்தும் தெரிந்த ஒருவராகவோ இருக்கலாம். நானும் அப்படிப்பட்ட ஒருவன்தான். எனது அழகு, உடல் சார்ந்தது மட்டுமல்ல. நான் உங்களை சிரிக்கவோ, அழவோ வைக்கும் போது ஏற்படும் கவர்ச்சியிலும் நேசம் உள்ளது. எனக்காக உங்களை இயங்க வைக்கும் போதும், உங்களுக்காக ஏங்கி நிற்கும்போதும் அதை நான் சிறப்பாக செய்கிறேன்.
நான் காதலில் நம்பிக்கை வைத்திருக்கிறேன். அதைப் பற்றி எனக்கு நன்றாகவே தெரியும். எனவே எப்போதும் பெண்களிடம் எனது நேசம் இருக்கும்” என்றார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X